நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் திமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். இது சாதாரண மருத்துவ பரிசோதனை என்றும் ரத்தம், சிறுநீர் மற்றும் ரத்த அழுத்தம், ஈசிஜி பரிசோதனைகள் முதல்வருக்க்கு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. இதனையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலரும் நலம் விசாரித்து வருகினறனர்.