திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக வேலுச்சாமியும் , அதிமுக கூட்டணி சார்பாக பாமகவின் ஜோதிமுத்தும் , அமமுக சார்பாக ஜோதிமுருகனும் போட்டியிடுகின்றனர் இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் மன்சூரும் , மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சுதாகரும் போட்டியிடுகிறார்கள் .அணைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் வேட்பாளர் ஜோதிமுத்து பிரச்சாரத்தின் போது பொங்கல் பரிசு 100 ரூபாய் கொடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட எடப்பாடி 1000 ரூபாய் வழங்கியுள்ளார் என்றும் , ஜெயலலிதாவைவிட எடப்பாடியின் அரசு அதிகமான நலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
ADVERTISEMENT
அதேபோல் ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 2000 கொடுக்கப்பட்டு வருகிறது தேர்தல் முடிந்தவுடன் வங்கியில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார். மேலும் இந்த அரசோடு சேர்ந்து என்னையும் பணியாற்ற இலையுடன் கூடிய மாங்கனி சின்னத்திற்கு வாக்குகளியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments