Skip to main content

சீனியர்களை ஓரங்கட்டிய எடப்பாடி! கொந்தளிப்பில் அதிமுக சீனியர்கள்!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

அ.தி.முக. தரப்பில் ராஜ்யசபா சீட்டுக்கு பலத்த போட்டி இருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத முன்னாள் மந்திரி முகமதுஜானும் மேட்டூர் சந்திரசேகரும் அ.தி.மு.க.வின் ராஜ்யசபா வேட்பாளர்களா அறிவிக்கப்பட்டு, அவங்க வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யும் ஆயிட்டாங்க.  அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பளிக்கலாம்ன்னு ஓ.பி.எஸ். சொல்லியிருக்கார். எடப்பாடியோ, அவர் வேண்டாம். தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பளிக்கலாம்ன்னு சொல்லியிருக்காரு. 
 

admk



சீனியர் அமைச்சர்களோ, இந்த ரெண்டு பேருமே வேணாம். இதுவரை நாடாளுமன்றம் போகாத ஒரு முஸ்லிம் பிரமுகருக்கு வாய்ப்பு கொடுப்போம்ன்னு சொன்னாங்க. எடப்பாடியோ, முன்னாள் அமைச்சர் முகமது ஜானை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோமேன்னு சொல்ல, அதுக்கு எல்லோரும் தலையாட்டிட்டாங்களாம். முகமதுஜான், சமீபத்தில் முதல்வர் எடப்பாடியை வெயிட்டா கவனிச்சார்ன்னு அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே பேச்சு அடிபடுது. இதேபோல் இன்னொரு சீட்டில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவரான மேட்டூர் சந்திரசேகரனை ராஜ்யசபாவுக்கு அனுப்பு வோம்ன்னு, தன் அமைச்சரவை சகாக்களிடம் எடப்பாடி ஓகே. வாங்கிட்டாருனு சொல்லப்படுகிறது. எடப்பாடிக்கு பர்சனல் உதவிகள் பலவற்றையும் செய்பவர் சந்திரசேகரன் என்பதால் அவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் மேட்டூர் சந்திரசேகருக்கு சீட் கொடுத்த எடப்பாடி மேலே அதே சேலம் மாவட்டத்திலேயே அதிருப்தி இருக்கிறது என்று அதிமுகவினர் கூறுகின்றனர். எடப்பாடியின் வலது கரம்போல் செயல்படும் சேலம் இளங்கோவன், அவரது டெல்லி தொடர்புகளையும் கவனித்துக்கொள்பவர். அதனால் அவர் தனக்கு ராஜ்யசபா பதவி கிடைக்கும்ன்னு பெரிதும் நம்பியிருந்தாராம். ஆனால், பழம் நழுவி சந்திரசேகர் மடியில் போய் விழுந்து விட்டதை ஜீரணிக்கமுடியாத இளங்கோவன், எடப்பாடிக்கு எதிராக எரிமலையாய் குமுறி வெடித்துக்கொண்டிருக்கிறார். அவரை தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் கட்சி சீனியர்கள் உள்ளிட்ட பலரையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்குனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.