Skip to main content

பொருளாதார வீழ்ச்சியும் கடவுளின் சாபமா? -நிர்மலா மீது சாமி அட்டாக் !  

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

nirmala sitharaman Subramanian Swamy

 

 

பாஜகவில் ஷேம் சைடு கோல் போடுவதில் சுப்பிரமணிய சாமியை விட்டால் வேறு ஆளே இல்லை என்கிற அளவுக்கு சு.சாமியின் கருத்துகள் பாஜகவில் சுவாரஸ்யமாக பேசப்படுகின்றன. 

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், கேபினெட் மந்திரியாகிவிட வேண்டும் என்பது சு.சாமியின் தீராத மோகம். அதுவும் நிதியமைச்சர் ஆக வேண்டும் என்பதில் அவருக்கு பேரார்வம்.  ஆனால், சாமியின் ஆசையை நிராசையாகவே வைத்துக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அவரை மத்திய அமைச்சராக்கினால் தனது தலைமையிலான அரசு என்னவாகும் என்பதை பிரதமர் மோடி உணர்ந்திருப்பதால்தான், சாமியை அமைச்சராக்குவதை தவிர்த்து வருகிறார் என்கின்றனர் பாஜகவினர். 

 

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை நடத்தி முடித்ததும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கரோனா நோய் தொற்று குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, கரோனா தொற்று என்பது கடவுளின் சாபத்தால் வந்தது என தெரிவித்து விட்டார். 

 

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்தை கண்டிக்கும் வகையிலும், நக்கல் அடிக்கும் வகையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி தந்தன. அதற்கு பதில் சொல்லமுடியாமல் தவித்தார் நிர்மலா சீதாராமன். 

 

இந்த நிலையில்தான், இது குறித்து கருத்து பதிந்துள்ள சு.சாமி, கரோனா தொற்று கடவுளின் சாபம் என்றால், தவறான முடிவுகளால் எடுக்கப்படும் பொருளாதார வீழ்ச்சியும் கடவுளின் சாபம் தானா?  என கேள்வி எழுப்ப. அவரது கருத்துகள் வைரலானது. 

 

அவரது கேள்வியில் உள்ள அர்த்தம் மிக வலிமையானது. என்றாலும், ஷேம் சைடு கோல் போடுவதா என பாஜகவிலேயே சாமிக்கு எதிராக விமர்சனங்கள் கச்சை கட்டுகின்றன!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.