Skip to main content

பிரச்சாரத்தின் போது டென்ஷனில் பாதியிலேயே சென்ற ஓபிஎஸ்!

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

தமிழகத்தில் வரும் 19ம் தேதி சூலூர்,அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம்,ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் மற்றும் அமைச்சர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வர் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது  அத்தொகுதி மக்கள்  "எங்களுக்கு இட ஒதுக்கீடு அரசாணை என்னாச்சு" என பட்டியலின மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

ops



இதனால் டென்ஷன் ஆன ஓபிஎஸ், "தனிப்பட்ட முறையில் என்னை வந்து பாருங்கள், நான் பதில் கூறுகிறேன்" என கூறி விட்டு, பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு எஸ்கேப் ஆனார் ஓ.பி.எஸ். இது பற்றி அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது பிரச்சாரத்தின் போது எங்களது கோரிக்கைகளை கேட்டோம் அதற்கு பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்து கொண்டு என்னை தனிப்பட்ட முறையில் பார்த்து கோரிக்கைகைளை கொடுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் என்று அதிருப்தியாக கூறினார்கள்.

 

சார்ந்த செய்திகள்