ADVERTISEMENT

துரைமுருகன் சவால்... ஜெயக்குமார் பதில்...

01:04 PM Apr 29, 2019 | rajavel

ADVERTISEMENT

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ஆ தேதி நடைபெற உள்ளது. திமுக வேட்பாளராக பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். இந்த நிலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் சூலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.

ADVERTISEMENT




அப்போது, ''திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில், எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நூற்றுக்கு நூறு திமுக வெற்றி பெறும். சூலூரையும் ஜெயித்து கொடுங்கள். 25 நாட்களுக்குள் இந்த ஆட்சியை மாற்றிக்கொடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்றார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது துரைமுருகன் பேச்சு குறித்த கேள்விக்கு, ''வரும் ஜீன் மாதம் திமுக ஆட்சி அமைக்கப்போவதாக துரைமுருகன் கூறுவது அவரது கற்பனை. வருகிற ஜூன் அல்ல, 2021 ஜூன் வந்தால் கூட அதிமுகதான் ஆட்சியில் நீடிக்கும்'' என பதில் அளித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT