Skip to main content

'துரை வைகோவிற்கு கட்சியில் பொறுப்பை வழங்க வேண்டும்...' - மதிமுக மாணவரணி தீர்மானம்!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

'Durai Vaiko should be given responsibility in the party ...' -mdmk student resolution!

 

மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 18.10.2021 திங்கள்கிழமை அன்று, மாநில மாணவர் அணிச் செயலாளர் பால. சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

 

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :

தீர்மானம் எண்: 1

ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்விக்கு எதிராகவும், சமூகநீதிக்கு எதிராகவும் உள்ள நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர் அணி சார்பில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, தஞ்சாவூர் ஆகிய ஐந்து மையங்களில் 'நீட் எதிர்ப்பு கருத்தரங்கம்' நடத்தப்படும் என, கடந்த 23.09.2021 அன்று வைகோ அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

 

வைகோவின் ஆணைக்கு இணங்க, ஐந்து மையங்களிலும் தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களைக் கொண்டு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவம்பர் மாத இறுதிக்குள் மாணவர் அணி சார்பில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கத்தை சிறப்பாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

 

தீர்மானம் எண் : 2

நடைபெற்று முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கழகத் தோழர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

 

தீர்மானம் எண் : 3

தமிழ்நாட்டின் மேன்மைக்காகவும், தமிழர்களின் உரிமைகளுக்காகவும் கடந்த இருபத்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, வைகோ தலைமையில் மதிமுக பாடுபட்டுவந்திருக்கிறது. தமிழர் உரிமைகளைப் பாதுகாக்கும் களத்தில் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் உயிர்ப்போடு இருக்க வேண்டிய தேவை மதிமுகவிற்கு இருக்கின்றது.

 

மாணவர்களையும், இளைஞர்களையும் அரசியல்படுத்துவதற்கும், கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சுவதற்கும் துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என, கட்சியின் கடைக்கோடி தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் விரும்புகிறார்கள், வரவேற்கிறார்கள்.

 

தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் ஒருமித்த கருத்து, துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும். மதிமுக தலைவர் வைகோவுக்கு உறுதுணையாக கட்சிப்பணி ஆற்ற வேண்டும் என்பதாகும்.

 

ஆகவே, 20.10.2021 புதன்கிழமை அன்று நடைபெறும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், துரை வைகோவுக்கு கட்சியில் உரிய, உயர்ந்த பொறுப்பை வழங்கி பணியாற்றுவதற்கு தலைமைக் கழகம் அனுமதிக்க வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக மாணவர் அணி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

மறைந்த தொழிலதிபர் கே.என். ராமஜெயம் சிலைக்கு துரை வைகோ மரியாதை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Durai Vaiko honors statue of late industrialist KN Ramajayam

திமுக முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் உடன் பிறந்த சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயத்தின் 12ம் ஆண்டு நினைவு தினமான இன்று, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில் துரை வைகோ கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Durai Vaiko honors statue of late industrialist KN Ramajayam

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மற்றும் தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு. பூமிநாதன், மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் ஆ. பாஸ்கர சேதுபதி, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் பெல். இராசமாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.