Skip to main content

''இந்தியாவை சீரழிக்கத்தான் திராவிட மாடலா?'' -பா.ஜ.க.ராதாகிருஷ்ணன் பேச்சு

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

Dravidian model to ruin India? -BJP Radhakrishnan Speech

 

இலங்கையிடம் உள்ள கச்சத்தீவை மீட்பதில் இந்திய அரசு மிகவும் உறுதியாக உள்ளதாகவும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைய எனவும் பா.ஜ.க முன்னாள் எம்பி கோவை சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

நேற்று ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,பேசும்பொழுது, "தமிழக நிதி அமைச்சர் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் மத்திய அரசுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் நிலக்கரி, மின்சாரம் போன்றவைகளுக்கு எவ்வளவு இவர்கள் பாக்கி வைத்து உள்ளார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும். இதுகுறித்த வெள்ளை அறிக்கையை அவர்கள் வெளியிட வேண்டும். அதேபோன்று ஜி.எஸ்.டி. வருவாயில் எல்லா மாநில அரசுக்கும் தர வேண்டியதை மத்திய அரசு முறைப்படி தான் வழங்கி வருகிறது. தி.மு.க. அரசு 'திராவிட மாடல்' எனக்கூறி தமிழர்களை சீரழித்துள்ளார்கள். அதேபோன்று இந்தியா முழுதும் சீரழிக்க தான் இந்தியா முழுவதும் 'திராவிட மாடல்' பரவுகிறது என்று கூறுகிறார்கள்.

 

தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருப்பதற்குக் காரணம் முந்தைய பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்ட பல்வேறு அணைகள், பிறகு காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்தான் காரணம். ஆனால் காமராஜர் போன்ற தலைவர்களை இவர்கள் எவ்வளவு இழிவாகப் பேசினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது அவர் மறைந்த பிறகு அவர்களையும் தங்களது திராவிட மாடலுக்கு ஒரு ரோலாக சேர்த்துக் கொள்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தாய்த் தமிழை மிக உயர்வாக மதிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தமிழ்மொழி உயர்ந்தது எனக் கூறியுள்ளார். எனவே ஹிந்தியும் சமஸ்கிருதத்தையும் மத்திய அரசு புகுத்துகிறது எனக் கூறுவது தவறானதாகும். ராகுல் காந்தி அரசியல் முதிர்ச்சியற்றவர். அதனால்தான் அவர் மோடி அரசு நாட்டை சீரழித்து விட்டது என கூறுகிறார். ஆனால் இன்று உலக வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவை உயர்வாகக் கருதுகின்றன. மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருமாறிக் கொண்டிருக்கிறது.

 

பஞ்சு விலை உயர்ந்ததால் நூல் விலை உயர்ந்தது . பஞ்சு விலை கட்டுப்படுத்த இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. இன்னும் 45 நாட்களுக்குள் இறக்குமதிகள் துவங்கும். பஞ்சு விலை குறைந்து நூல் விலையும் குறையும். அப்போது ஜவுளித் தொழில் நெருக்கடி தீரும். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு, சிமெண்ட் விலை கடும் உயர்வு, கேரளாவுக்கு அரிசி கடத்தல், காவல்துறையில் அரசியல் தலையீடு துவங்கிவிடும். இப்போது காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து குறை கூறிக்கொண்டிருக்காமல் தமிழகத்தின் தொழில், வேளாண்மை முன்னேற்றத்திற்கு திமுக அரசு பாடுபடவேண்டும். மற்ற மாநிலங்களில் தொழில்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தேர்தல் விதிகளில் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஒரு பதவியில் இருக்க முடியாது .அதன்படிதான் தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இது வாரிசு அடிப்படையில் வருவதல்ல. பாரதிய ஜனதா கட்சி ஒரு கட்டுக்கோப்பான கட்சி என்பதை இந்த உட்கட்சி தேர்தல் மூலம் நாங்கள் மீண்டும் நிரூபித்துள்ளோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.