'Doubts are rising on the governor' - Pamaka Anbumani interview

Advertisment

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் நிராகரித்து அனுப்பி இருந்த நிலையில் இரண்டாவது முறை மீண்டும் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தர்மபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ''ஆளுநருக்கு இதில் என்ன கேள்விகள், என்ன குறைகள் இருக்கின்றது எனத்தெரியவில்லை. எனக்கு இதை வேறுவிதமான கோணத்தில் பார்க்க வேண்டுமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் வந்திருக்கிறது'' என்றார்.