Skip to main content

“சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா?” - அமைச்சர் மா.சு. பேட்டி

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

 "Does Shivaji Krishnamurthy need so much publicity?" - Interviewed by Minister M. Su

 

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொங்கல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்டார்.

 

அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள், “இந்த வருடம் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில், விளம்பரங்களில் தமிழ்ப்புத்தாண்டு என்று குறிப்பிடாமல் தமிழர் திருநாள், பொங்கல் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்களே?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சு, “தமிழர் திருநாள் என்பது தமிழ்ப்புத்தாண்டு என்பதைக் குறிக்கின்ற நாள்தான். இது சமத்துவப் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு தமிழர் திருநாள்” என்றார்.

 

“ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை அதிமுக ஆதரித்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “அவர்கள் இதைத் தெரிந்து செய்தார்களா, தெரியாமல் செய்தார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு 60க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இப்போது இருக்கிறார்கள். அப்படி நடந்தால் ஒன்றுமே இல்லாத நிலை அவர்களின் இயக்கத்திற்கு உருவாகும் என்பதைத் தெரிந்து செய்தார்களோ தெரியாமல் செய்தார்களோ என்று தெரியவில்லை'' என்றார்.

 

“விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் குறித்து அவதூறாகப் பேசி உள்ளது வைரலாகி வருகிறதே” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “திமுகவில் மேடையில் ஒரு பேச்சாளர் அநாகரீகமாகப் பேசி இருப்பது வருத்தத்திற்குரியது. அதற்கு தமிழக முதல்வரைப் பொறுத்தவரை எப்பொழுதுமே சாதகமாகப் பதில் சொல்லமாட்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி எந்த வகையிலும் அநாகரீகமாக பேசக்கூடாது; ஆளுநரை தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேசக்கூடாது என்று அறிவுறுத்தினார் முதல்வர். அடுத்தநாளே எல்லா செய்தித்தாள்களிலும் இது செய்தியாக வந்தது.

 

எனவே, தலைமைக் கழகத்தின் சார்பில் நிச்சயமாக ஆதரவளிக்கின்ற விஷயம் அல்ல இது. யாரோ ஒரு பேச்சாளர் பேசினார் என்பதற்காக இன்று ஆளுநர் மாளிகை வளாகமே வழக்கு தொடுத்து இருக்கிறது என்பதுதான் விந்தையாக இருக்கிறது. காரணம் எல்லா கட்சிகளிலும் பேச்சாளர்கள் எப்படி தரம் குறைந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த இயக்கங்களைச் சார்ந்தவர்கள் யாரும் அவர்களைக் கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், திமுகவில் எங்கேயோ ஒரு பேச்சாளர் தரக்குறைவாகப் பேசினார் என்பதற்கு நாங்களும் வருந்துகிறோம். ஆனாலும் இதற்கென்று இவ்வளவு விளம்பரம் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு தேவையா என்பதுதான் தெரியவில்லை” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.