Skip to main content

எனக்கு ஓட்டுபோட வேண்டாய்யா... திருப்பரங்குன்றத்தில் தினகரன் டீம்...

Published on 12/09/2018 | Edited on 12/09/2018
ttv dhinakaran



இடைத்தேர்தல் தேதி எப்போது என்று தெரியாத நிலையில்  திருப்பரங்குன்றம் தொகுதியில் களமிறங்கி பணிகளை ஆரம்பித்துவிட்டது டி.டி.வி.தினகரன் டீம்.
 

தேர்தல் களத்தில் ஈடுபட்ட அ.ம.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, இந்த தொகுதியை பொறுத்தவரை 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள். 292 போலிங் பூத் இருக்கு. ஒரு பூத்துக்கு சராசரியாக 1,200 வாக்காளர்கள். 

 

ttv


அனைத்து பூத்துகளுக்கும் தலா 5 பொறுப்பாளர்களை இப்போதே நியமித்துவிட்டார் தினகரன். இரண்டு மாதத்திற்கு அவர்களுக்கு தினசரி சம்பளம் 1000 ரூபாய் என பேசி 10 ஆயிரம் ரூபாய் அட்வான்சும் கொடுக்கப்பட்டுவிட்டது.
 

அதேபோல் தினசரி 250 வாக்காளர்களைச் சந்திக்கும் கேன்வாசிங் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு தினசரி சம்பளம் ரூபாய் 500 மற்றும் சாப்பாடு என ஏற்பாடு பண்ணிட்டோம். 
 

இதுவும் போக பூத் வாரியாக 5 முதல்நிலை பொறுப்பாளர்கள் என கணக்குப் போட்டு 1460 பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் அட்வான்சும் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கோம். இப்பவே எங்களுக்கு ஒரு லட்சம் ஓட்டு கன்ஃபார்ம்.

 

இதுமட்டுமல்ல... கடைசி நேரத்துல யாருமே எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அதிரடி வேலையக் காட்டுவாரு எங்க அண்ணன் தினகரன். உறுதியா சொல்றேங்க... இடைத்தேர்தல் ரேஸில் ஜெயிக்கப் போவது நாங்கதான் என பொளத்து கட்டினார். 
 

நீங்க சம்பளத்துக்கு நியமிச்சியிருக்கிற ஆட்களெல்லாம் உங்க கட்சிக்காரங்களா? என்றதற்கு, 'எங்க கட்சிக்காரங்களும் இருக்காங்க. மற்ற கட்சிக்காரங்களும் இருக்காங்க. மற்ற கட்சிக்காரங்களை, எங்களுக்கு ஓட்டுப்போட வேண்டாய்யா... வேலை செய்யி... சம்பளத்த வாங்கிட்டுப்போன்னு சொல்றோம். அவுங்களும் சரிதான்னு செய்யுறாங்க. மற்ற கட்சிக்காரங்களா இருந்தாலும், எங்கக்கிட்ட சம்பளத்த வாங்கிகிட்டு ஓட்ட மாத்தி போட்டுருவாங்களா...? என்றார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

Next Story

'பேராசை தான் காரணம்'-விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Greed is the reason'- Congress candidate interview with Vilavanko

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரியில் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. அதற்கான பரப்புரைகளிலும் அரசியல் கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டைக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,''முன்பு விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இருந்தார். அவர் செய்ய வேண்டிய கடமைகளை உண்மையாக தெளிவாக செய்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற வரைக்கும் மிக தெளிவாகத்தான் மக்களுக்கான பணியை செய்தார். இன்றைக்கு அவர் பேராசை காரணமாக காங்கிரசை விட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதில் மக்கள் மத்தியில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது. பாஜக செய்யும் பொய்ப் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை. அதை நீங்கள் ஜூன் நான்காம் தேதி பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்றார்.