விருதுநகரில் திமுக கூட்டணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக மற்றும் அதன் கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisment

dmk viruthunagar meet

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அந்தக்கூட்டத்தில் பேசிய தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இதற்குமுன் விருதுநகர் தொகுதியில் பலர் வெற்றிபெற்றிருந்தாலும், மாணிக்கம்தாகூர்தான் தொகுதியில் வேலை பார்த்தார். அவர்தான் நிற்கவேண்டும், அவர்தான் வெற்றி பெறுவார் என்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் நாங்கள் முன்பே கூறினோம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிறகு இது ஆளுங்கட்சி கூட்டமாக இருக்கும். இந்தத் தேர்தலில் உழைத்தால்தான் நமக்கு எதிர்காலம், இல்லையென்றால் அடுத்த தேர்தலை சந்திக்கும் சக்தி இல்லாமல் போய்விடும். இதனால் நாம் அனைவரும் வெற்றிக்கு ஒற்றுமையாய், ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்றார். இந்தக்கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.