திமுக பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக பொது செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமீப காலமாக முன்பு போல் செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அவரது பொறுப்புகளை கவனிக்க திமுகவில் இருக்கும் சீனியர்களில் ஒருவருக்கு அவரது பொறுப்புகளை கவனிக்க வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதனால் தற்போது நாடாளுமன்ற திமுக குழு தலைவராக உள்ள கட்சியின் சீனியர் டி.ஆர்.பாலுவிற்கு இணைப் பொது செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர. இதே போல் திமுகவில் இருக்கும் சீனியரான எ.வ.வேலுவுக்கும் திமுகவில் முக்கிய பதவி கொடுக்கப்படலாம் என்று கூறிவருகின்றனர். அதில் எ.வ.வேலுக்கு தலைமை நிலையச் செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதை திமுக பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இது குறித்து திமுக தரப்பிடம் எந்த ஒரு அதிகார தகவலும் வெளிவரவில்லை. சமீப காலமாக திமுகவில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருவதால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.