Advertisment

விதிகளுக்குப் புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்... (படங்கள்)

விதிமுறைகளை மிறி செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி சோழிங்கநல்லூரில் உள்ள சுங்கசாவடி அருகே தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Advertisment

சென்னையின் துரைப்பாக்கம், பெருங்குடி, அக்கரை, போரூர் போன்ற இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு, மக்களிடம் அதிக பணம் வசூல் செய்வதாக தி.மு.க. எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அவற்றை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார்.

Advertisment

அதன்படி, விதிகளுக்குப் புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி இன்று (11.12.2020) சோழிங்கநல்லூரில் அக்கரை சுங்கச்சாவடி அருகே மா.சுப்பிரமணியன் தலைமயில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

protest Toll Plaza
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe