Advertisment

ஸ்டாலின் தனது முயற்சியை கைவிட்டாரா?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. அதோடு 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களை கைப்பற்றியது. மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களை வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் எம்.எல்.ஏ தனியரசு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தில் கலந்துகொண்ட போது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவின் அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது என்றும் பாஜக - அதிமுக கூட்டணி சுமூகமாக இருக்கும் நிலையில் இந்த ஆட்சியை எளிதாக கவிழ்க்க முடியாது என்கிற மனநிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வந்துவிட்டார் என்றும் தனியரசு எம்எல்ஏ அந்த விவாதத்தின்போது தெரிவித்தார்.

Advertisment

dmk

மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக ஆட்சியை எப்படியாவது கவிழுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஸ்டாலின் அவர்களுக்கு இருந்ததாகவும், ஆனால் தேர்தலுக்குப் பின் மத்தியில் ஒரு வலுவான பாஜக ஆட்சி அமைந்த பின்னர் அந்த கட்சியின் கூட்டணி கட்சியான அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது என்பது முடியாத காரியம் என்று ஸ்டாலின் முடிவு செய்துவிட்டு அந்த முயற்சியை கைவிட்டார் என்றும் தனியரசு எம்.எல்.ஏ கூறினார்.

Advertisment
admk elections stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe