Skip to main content

எளிய மனிதர்களுக்கும் அதிகாரம்..!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

DMK Sivashankar's political  History


திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், ‘எளிய மனிதனுக்கும் அதிகாரம்’ என்ற அடிப்படையில் பல புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அவர்களில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் சிவசங்கர். இவருக்குப் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

சிவசங்கர், மிகவும் எளிய மனிதர். கட்சிகளைக் கடந்து மாற்றுக் கட்சியினர் பொதுமக்கள் என எல்லோரிடமும் சகஜமாக நெருங்கி பேசி பழக கூடியவர். இவரது தந்தை மறைந்த சிவசுப்பிரமணியம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டப் பகுதியில் திமுகவில் முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியில் 1989ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வழக்கறிஞரான இவர் தற்போது நீலகிரி எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான பெரம்பலூர் ஆ. ராசாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர். 

 

இந்த சிவசுப்பிரமணியன், கலைஞர், பேராசிரியர், முரசொலி மாறன் ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அதனடிப்படையில் இவருக்கு ஒருமுறை ராஜ்யசபா எம்.பி. பதவியையும் கட்சித் தலைமை அளித்தது. அப்பாவின் வழியில் சிவசங்கரும் தீவிரமாக கட்சிப் பணிகளில் செயல்பட்டவர். ஸ்டாலினின் அன்புக்குப் பாத்திரமானவர். இவரது தாயார் ராஜேஸ்வரி, இவரது மனைவி டாக்டர் காயத்ரி தேவி. சிவ சரண், சூர்யா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், குடும்பத்தினரோடு இருந்ததைவிட கட்சியினருடனும் பொதுமக்களுடனும் அதிக நேரத்தை செலவு செய்தவர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

 

தற்போதைய அமைச்சர் சிவசங்கர், இலக்கியவாதியும் கூட; இவர், ‘மக்களோடு நான்’, ‘சோழன் ராஜா பிராப்தி’, ‘தோழர் சோழன்’ ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். சிலம்பு விளையாட்டு சம்மேளனத்தின் தமிழக அளவில் தலைவர், தடகள சங்கத்தின் தலைவர் இப்படி பன்முகத்தன்மை கொண்ட அரசியல்வாதி. 

 

இவர் 1996 - 2001 வரை பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர், 2001 - 2006 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 2006 - 2011 ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர், 2011 - 2016 குன்னம் சட்டமன்ற உறுப்பினர் என தொடர்ந்து அரசியலில் தீவிரமாக இருந்துவந்தவர். 2016 சட்டமன்றத் தேர்தலில் இவரை திமுக அரியலூர் தொகுதியில் நிறுத்தியது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். மீண்டும் 2021 தேர்தலில் அரியலூர் தொகுதியில் கட்சித் தலைமை போட்டியிட வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையோடு அரியலூர் தொகுதியில் பல்வேறு ஆக்க பணிகளை முனைப்புடன் செய்து வந்தார்.

 

ஆனால், குன்னம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு உட்கட்சி அரசியலை முறியடித்து எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று இப்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். 2011 - 2016 அதிமுக ஆட்சியில், திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், சட்டமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை எதிரொலிக்க செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது சட்டமன்றத்தில் திமுகவினரை பேசவிடாமல் ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வெளியேற்றும்போது கடும் போராட்டம் நடத்தியவர்களில் சிவசங்கரும் ஒருவர். 

 

DMK Sivashankar's political  History

 

அதேபோன்று தொகுதியிலும் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்துவார் தொகுதியில் மட்டுமல்ல கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் கட்சி பிரமுகர்களின் அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ள இரவு, பகல் என்று பாராமல் சுற்றிக்கொண்டே இருப்பார் என்று அத்தொகுதி திமுகவினர் தெரிவிக்கின்றனர். மேலும், அதேபோன்று அதிமுக ஆட்சியில் மக்களுக்கு விரோதமான திட்டங்களை, பிரச்சினைகளை எதிர்த்து மாட்டுவண்டியில் ஊர்வலமாகச் சென்று போராட்டம் உட்பட பல்வேறு வித்தியாசமான போராட்டங்களை நடத்தியவர். 

 

தற்போது இவருக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளது திமுக தலைமை. இதனைக் கண்டு அரியலூர் மாவட்ட மக்கள் கட்சி கடந்து சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தபோது திருச்சி, தஞ்சை பகுதியில்தான் திமுக, அதிமுக கட்சிகளில் அமைச்சர் பதவிகள் கிடைக்கும். மிகவும் பின்தங்கிய அரியலூர் மாவட்டம், தேவனூர் கிராமத்தில் பிறந்த சிவசங்கர் அவர்களை அமைச்சர் ஆக்கியுள்ளது வரலாற்றுப் பதிவு என்கிறார்கள் திமுக தொண்டர்கள்.

 

அதேவேளையில், மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மூலம் மாவட்ட மக்களுக்குப் போதிய அளவு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. இந்த சிமெண்ட் ஆலைகளால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. கிராமச் சாலைகள் பல இடங்களில் மோசமாக சீர்கெட்டு கிடக்கின்றன இவையெல்லாம் சீர் செய்வார் என்ற பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர் மாவட்ட மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.