Skip to main content

கரோனா ஊரடங்கிலும் குடிநீருக்கு பண வசூலா? திமுக கண்டன ஆர்ப்பாட்டம்...

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

dmk

 

கரோனா காலத்தில் குடிநீருக்கு பணவசூல் செய்வதை தமிழக அரசு உடனே நிறுத்தக்கோரி செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

கடந்த ஜூலை 7 அந்து கரோனா தொற்றால் அரசு விடுத்த ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் செந்துறை ஒன்றியத்தில் கிராமப்புறங்களில் குடிநீர் இணைப்புக்கு உள்ளாட்சி துறை மூலம் ரூ. 1000 கட்டாய வசூல் செய்யப்படுகிறது. தமிழக அரசின் இந்த கொடுஞ்செயலைக் கண்டித்தும், கட்டண வசூலை உடனே நிறுத்த கோரியும் இன்று காலை 9 மணிக்கு செந்துறை வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்கள் முன்பாக கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

dmk

ஆலத்தியூரில் ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி, அசாவீரன் குடிக்காட்டில்கழக கொள்கைபரப்பு துணை செயலாளர் ச.அ. பெருநற்கிள்ளி, பெரியாகுறிச்சியில் மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், பொன்பரப்பியில் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பி. ஆர். பாண்டியன், குழுமூரில் ஒன்றிய பொருளாளர் கே. ஆர். பெரியசாமி, சிறுகளத்தூரில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் (பரிந்துறை) துரை. தேன்துளி, தளவாயில் ஒன்றிய வி. தொ. அணி. அமைப்பாளர்(பரிந்துறை) புலேந்திரன், அயன்தத்தனூரில் ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர்(பரிந்துறை) க. நல்லுசாமி, மணக்குடையானில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆ. தமிழ்மாறன், மணபத்தூரில் ஊராட்சி கழக செயலாளர் ஜெயராமன், வஞ்சினபுரத்தில் ஊராட்சி கழக செயலாளர் அன்பழகன், மருவத்தூரில் ஊராட்சி கழக செயலாளர் அருள்மணி, துளாரில் ஊராட்சி கழக செயலாளர் ஜெய்குமார், ஆதனக்குறிச்சியில் ஊராட்சி கழக செயலாளர் இராசேந்திரன், சன்னாசிநல்லூரில் ஒன்றிய இளைஞர் அணி துணைஅமைப்பாளர் இர. பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கலையரசன், ஒன்றிய அவைத்தலைவர் மா. சிவப்பிரகாசம், ஒன்றிய துணை செயலாளர்கள் வி. எழில்மாறன், விபி. நடேசன், மு. சபாபதி, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மு. சித்ரா, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் இராசவேல், ஒன்றிய மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பி. வித்தியா, ஒன்றிய ஆதி திராவிடர் நல அணி அமைப்பாளர் ம. ரெங்கநாதன், ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் வீரா. ராசேந்திரன், ஒன்றிய கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் இராசு, ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் இராசா, ஒன்றிய நெசவாளர் அணி ச. வேல்முருகன், ஒன்றிய சிருபான்மையோர் அணி அமைப்பாளர் அக்பர் அலி, ஒன்றிய பொறியளர் அணி அமைப்பாளர் ம. கணேசன் மற்றும் கழக முன்னணியினர் கலந்துகொண்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. “தமிழக அரசே, எடப்பாடி அரசே! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! குடிநீருக்கு பணம் கேட்பதை! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! கரோனா தொற்று காலத்தில்! குடிநீருக்கு பணம் கேட்பதை! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! ஊரடங்கு காலத்தில்! வாழ்வாதாரம் இல்லாமல்! வதைபடும் மக்களிடம்! குடிநீருக்கு பணம் கேட்கும்! கொடுங்கோலன் எடப்பாடியே! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! குடிநீர்கட்டணத்தை உடனே நிறுத்து! இணைப்புக்கு 1000 ரூபாய்! எங்கேபோவோம்! எங்கேபோவோம்! ஊரடங்கு பேரிடர் நிதியாய்! அரசு கொடுத்ததோ 1000ம் ரூபாய்! அதையும் பிடுங்கும் எடப்பாடியே! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! ஊராடங்கு காலத்தில்! உணவுக்கு தவிக்கும் மக்களிடம்! குடிநீருக்கு பணம் கேட்கும்! உள்ளாட்சி துறையை கண்டிக்கிறோம்! உடனே நிறுத்து ! உடனே நிறுத்து! குடிநீருக்கு பணம் கேட்பதை! உடனே நிறுத்து! உடனே நிறுத்து!” என முழக்கமிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.