Skip to main content

அ.தி.மு.க ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள்தான் விவசாயிகள் கொண்டாடும் திருநாள்! - மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

dmk

 

“தமிழக விவசாயிகளுக்குத் துரோகம் செய்த அ.தி.மு.க ஆட்சி விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும். இந்த ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள்தான் விவசாயிகள் தங்கள் இல்லங்களில் கொண்டாடும் திருநாள்!” என கூறியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

இன்று (29-10-2020) காலை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் - (மறைந்த) தலைமைச் செயற்குழு உறுப்பினரும் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளருமான மு.காந்தி அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார்.

 

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ஒரத்தநாடு மு.காந்தி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து இருந்தாலும், அவர் ஆற்றிய பணிகள் இப்போதும் - ஏன், எப்போதும் நம் கண் முன் வந்து நிழலாடிக் கொண்டிருக்கும்.

 

ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியச் செயலாளராக மட்டுமின்றி - தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க.வின் போர் வீரராகத் திகழ்ந்தவர் அவர். இந்த இயக்கத்தில் உழைத்த ஒருவர் - பல முக்கியப் பதவிகளுக்கு வர முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் காந்தி அவர்கள்.

 

1996-ல் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். 1998-ல் ஒன்றியக் கழக துணைச் செயலாளர். 2001-ல் புதூர் ஊராட்சி மன்றத் தலைவர். 2006-ல் ஒரத்தநாடு ஒன்றியப் பெருந்தலைவர். ஒருங்கிணைந்த ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர். 2014-ல் இருந்து தனது மறைவு வரை- அவர் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியச் செயலாளர்.

 

இந்த இயக்கம் - திராவிடப் பேரியக்கம் அப்படிப்பட்டது. தன் வளர்ச்சிக்குப் பாடுபட்ட கள வீரர்களைக் கை தூக்கி விட்டு அழகு பார்த்த இயக்கம். இன்றைக்கும் கட்சிக்காக தியாகம் செய்தவர்களை முன்னிறுத்தும் இயக்கம். அதனால்தான் கட்சியின் இன்பத்திலும்- துன்பத்திலும் வளர்ந்த மூத்த கழகத்தினருக்கு “பொற்கிழி” வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

 

அதேபோல், திடீரென்று மறைவெய்தும் கழகக் காளையர்களுக்கு அஞ்சலி செலுத்தி - இந்தக் கரோனா காலத்திலும் காணொலி வாயிலாகப் படத்திறப்பு விழா நடத்தி வருகிறோம். அந்த வகையில் ஒவ்வொரு தொண்டனையும் மதிக்கும் இயக்கம் இந்த இயக்கம் என்பதை நீங்களும் அறிவீர்கள். நானும் அறிவேன்.

 

அப்படித்தான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் இந்தப் பேரியக்கத்தை வளர்த்திருக்கிறார்கள்.

 

இன்றைக்கு நடைபெறும் அ.தி.மு.க ஆட்சி  தமிழகத்தின் சாபக்கேடாக இருக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை - மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கும்பிடு போட்டு ஆதரவு தெரிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி. விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைய வைக்கும் நெல்லுக்கு அ.தி.மு.க அரசு கொடுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையே போதாது. அந்தக் குறைந்த பட்ச விலைக்கும் மூன்று வேளாண் சட்டங்களில் உத்தரவாதம் இல்லை.

 

பஞ்சாப் மாநிலத்தில் குறைந்த பட்ச ஆதார விலைக்குக் கீழ் நெல் வாங்க தடை போட்டுச் சட்டம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படி ஒப்பந்தம் போடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை என்று கூறுகிறது அந்தச் சட்டம். பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கு உள்ள தைரியம் திரு. பழனிசாமிக்கு இல்லை. அப்படியொரு சட்டத்தை தமிழகச் சட்டமன்றத்திலும் கொண்டு வாருங்கள் என்று தி.மு.க வலியுறுத்தியது.

 

நானே முதலமைச்சர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தேன். ஆனால் இன்றுவரை அதற்கு பழனிசாமி தயாராக இல்லை. கொஞ்சம் கூட மனச்சாட்சியே இன்றி வேளாண் சட்டங்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு இன்றைக்கு மாட்டு வண்டி ஓட்டி – விவசாயிகளை ஏமாற்றுகிறார்.

 

குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமல்ல - விவசாயிகளின் நெல்லைக் கூட கொள்முதல் செய்யப் பழனிசாமிக்கு மனமில்லை. போதிய நேரடிக் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தவில்லை. ஈரப்பதம் அதிகம் இருந்தாலும் கொள்முதல் செய்யுங்கள் என்று நான் விடுத்த வேண்டுகோளை இதுவரை ஏற்கவில்லை.

 

1,000 மூட்டை நெல்லுக்கு மேல் கொள்முதல் செய்யமுடியாது என்று கைவிரிக்கிறார். அதைக் கொள்முதல் செய்யக் கூட கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மூட்டைக்கு இவ்வளவு கொடுத்தால்தான் நெல்லை கொள்முதல் செய்வோம் என்று சொல்லி விவசாயிகளைக் கதிகலங்க வைக்கிறார்கள். இதனால் உயர்நீதிமன்றமே, “விவசாயிகளிடம் நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம்” என்று கண்டனம் செய்தது. அப்போதும் கூட இந்த எடப்பாடி அரசு திருந்தவில்லை.

 

cnc

 

விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகித் தவிக்கிறார்கள். கரோனா பேரிடரும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது.

 

அந்த உத்தரவை எதிர்த்து – உச்சநீதிமன்றத்திற்குச் சென்று - விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றவர் இதே பழனிசாமி. விவசாயிகளுக்கு மன்னிக்க முடியாத துரோகங்களை அடுக்கடுக்காகச் செய்து விட்டு இன்று மாட்டு வண்டியில்  ஏறி - நின்று போலி விவசாயி வேடம் போட்டு நடித்து மக்களை ஏமாற்றுகிறார்.

 

விவசாயிகள் மேல் உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் செயல்படுத்த முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள் பார்ப்போம்.

 

நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் அளிக்காத வேளாண் சட்டங்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று சொல்லுங்கள்.

 

அதைச் செய்துவிட்டு, இப்படி மாட்டு வண்டியில் ஏறி விவசாயி என்று சொல்லுங்கள். அதை விடுத்து - ஆட்சிக்காலம் முழுவதும் விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டு, காவிரி டெல்டாவில் தூர் வாருவதிலும் கோடிக்கணக்கில் ஊழல் செய்து விட்டு நானும் விவசாயி நானும் விவசாயி என்று தயவு செய்து போலி வேடம் போடாதீர்கள். உழைக்கும் வர்க்கமான இந்த நாட்டின் முதுகெலும்புகளாக இருக்கும் விவசாயிகளைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.

 

நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக நடத்திய ஆலோசனையில் முதலமைச்சர் பழனிசாமி ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார். அரசு நடவடிக்கை எடுத்ததால் கரோனா குறைந்து விட்டது என்கிறார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனாவிற்குப் பலியாகியிருப்பது பழனிசாமியின் மோசமான நிர்வாகத்தால் என்பதை மறந்து விட்டு இப்படிப் பொய் சொல்கிறார். கரோனா வந்தது உண்மை- அது தானாகவே குறைவது உண்மை. தானாகக் குறைவதைத் தடியெடுத்து விரட்டுவது போல் பொய் சொல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

 

கரோனாவால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். கூலித் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டார்கள். சிறு வியாபாரிகள் திண்டாடினார்கள். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்றுவரை இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. பெரிய தொழிற்சாலைகளே இன்றைக்கு சகஜ நிலைமைக்கு இன்னும் வர இயலவில்லை. வேலை இழந்தவர்களுக்கு இன்னும் மீண்டும் வேலை கிடைக்கவில்லை. கரோனா காலத்திலும் சொத்து வரி செலுத்துவதற்கு அபராதம் போட்டவர் பழனிசாமி. கரோனா காலத்திலும் மின் கட்டணத்தை ஈவு இரக்கமில்லாமல் வசூலித்து - அதைக் குறைக்க முடியாது என்று நீதிமன்றத்தில் வாதிட்டவர் பழனிசாமி.

 

கரோனாவால் மக்களுக்கு நஷ்டம். ஆனால், பழனிசாமிக்கு லாபம்; மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லாபம்; உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு லாபம்.

 

முகக்கவசம் கொள்முதலில் ஊழல். பிளீச்சிங் பவுடர் வாங்குவதில் ஊழல். அதிவிரைவு கரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்குவதில் ஊழல். விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று நடத்தும் கரோனா விளம்பரங்களில் ஊழல். கரோனாவிற்காக பணியாளர் நியமனம் என்று- அதிலும் ஊழல்.

 

nkn

 

இப்படி, முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கரோனா ஊழலில் கொள்ளை லாபம். மக்கள் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இல்லை என்று பழனிசாமியால் மறுக்க முடியுமா?

 

நாளைக்கே கரோனா கொள்முதல் குறித்த அனைத்து விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிடும் துணிச்சல் பழனிசாமிக்கு உள்ளதா? அதனால்தான் சொல்கிறேன், எடப்பாடி ஆட்சி தமிழகத்திற்குத் துரோகம் செய்த ஆட்சி. தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி.

 

இந்த ஆட்சி – விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும். இந்த ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள்தான் விவசாயிகள் தங்கள் இல்லங்களில் கொண்டாடும் திருநாள்.

 

அந்த நன்னாளை உருவாக்கிட திராவிட முன்னேற்றக் கழகம் போர்ப் பரணி பாடும். அந்தப் போரில் தமிழக மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, இருட்டில் தவிக்கும் தமிழகத்தின் விடியலுக்கான கழகத்தின் ஆட்சியை - பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியை - முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியை அமைப்போம். நன்றி. வணக்கம். இவ்வாறு உரையாற்றினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.