Skip to main content

தி.மு.க. குறிவைக்கும் அ.தி.மு.க. அமைச்சர்... அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட உத்தரவு!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

admk


தி.மு.க.வின் ஒன்றிணைவோம் வா' செயல்பாட்டுக்கு எதிராக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திடீர் என்று பொங்கியுள்ளார்.
 


இதன் பின்னணி பற்றி விசாரித்த போது, ஏற்கனவே சர்ச்சைகளில் அடிபட்ட கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்தின் வழியாக, உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்ததில் அமைச்சர் காமராஜ் புகுந்து விளையாடியதாகப் பேச்சு அடிபடுகிறது. அவர் மகன் டாக்டர் இனியனின் மனைவி மற்றும் மாமனார் குடும்பத்தின் பெயரில், தஞ்சை சரபோஜி கல்லூரி எதிரில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி ஒரு மல்டி லெவல் மருத்துவமனை கட்டப்படுவது பற்றி ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அதை அந்த நிறுவனமே கிஃப்ட்டாக கட்டித் தருவதாகச் சொல்கின்றனர். இது சம்பந்தமான விவரங்களை தி.மு.க தரப்பு திரட்டியுள்ளது. 

இதையறிந்த எடப்பாடி, தி.மு.க.வால் குறிவைக்கப்பட்டிருக்கும் நீங்களே, தி.மு.க.வுக்கு பதில் கொடுத்து அதோடு ஃபைட்டை ஆரம்பியுங்கள். தி.மு.க, தலைமைச் செயலாளரிடம் கொடுத்த ஒரு லட்சம் மனு குறித்து பதில் சொல்லுங்கள் என்று சொல்லியதாகச் சொல்கின்றனர். அதனால் அமைச்சர் காமராஜூம், தி.மு.க. தந்த பொதுமக்கள் மனுக்களில் சிறு-குறு தொழில் பற்றிய கோரிக்கைகள் இல்லை. ரேஷன் பொருள் தட்டுப்பாடு பற்றிதான் இருக்கிறது என்று மீடியாக்களிடம் கூறியுள்ளார். ஆனால், இதே அமைச்சர்தான் ஏற்கனவே, தமிழகத்தில் உணவுப் பொருள் தட்டுப்பாடே இல்லாமல் ரேஷனில் வழங்கப்படுகிறது என்று சொல்லியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.