Skip to main content

தேனி மாவட்ட அரசியலில் திமுக வீக்... உச்சகட்ட கோஷ்டி பூசலில் நிர்வாகிகள்... அதிருப்தியில் திமுக தலைமை!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

தி.மு.க.வுக்கு ரொம்ப வீக்கான மாவட்டம் என்றால் தேனி மாவட்டம்தான் என்பது அரசியல் வட்டாரத்தில் ரொம்ப பாப்புலர். இத்தனைக்கும் கட்சி அமைப்புகள் பலமாக இருக்கிற மாவட்டம்தான். ஆனால், கோஷ்டிப் பூசல்கள்தான் காலங்காலமாக தி.மு.க.வை பாதிக்கும் விஷயமாக தொடர்கிறது.

தேனி மாவட்டத்துக்கு இதுவரை உருப்படியான ஒரு மாவட்டப் பொறுப்பாளரை நியமிக்க முடியாத அளவுக்கு தலைமையே திண்டாடுகிறது. இப்போதைய மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு எதிராக, எல்.மூக்கையா, கம்பம் செல்வேந்திரன், ஜெயக்குமார், போடி லெட்சுமணன், சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த தங்க தமிழ்செல்வன் என்று பலரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்படுகிறார்கள். ஒரு ஆண்டுக்கு முன், தேனி ஒன்றியச் செயலாளர் ரத்தினசபாபதி, சின்னமனூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் குமரன், பெரியகுளம் நகரச்செயலாளர் அபுதாகிர், கம்பம் நகரச் செயலாளர் சிங் செல்லப்பாண்டி ஆகியோரின் பதவிகளை தி.மு.க. தலைமை பறித்தது. இவர்கள் அனைவரும் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள்.

 

dmk



அவர்களுக்குப் பதிலாக சக்கரவர்த்தி, அண்ணாதுரை, முருகேசன், முரளி, நெப்போலியன் ஆகியோரை புதிய பொறுப்பாளர்களாக நியமித்தது. இதையடுத்து பதவி பறிக்கப்பட்டவர்கள் தலைமையிடம் சென்று நேரில் முறையிட்டார்கள். அதைத் தொடர்ந்து, புதிய பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டு, பொறுப்புக்குழுக்களை தலைமை அறிவித்தது. இந்த பொறுப்புக்குழுத் தலைவர்களாக ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.


நியமிக்கப்பட்டு ஒருவாரமே ஆன நிலையில், பொறுப்புக்குழுவில் யாருக்கு பவர் என்ற புதிய ஃபைட் தொடங்கியிருக்கிறது. பொறுப்புக்குழு தலைவருக்கு பதவியில்லை என்று ஒரு பிரிவினரும், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் தலைவரின் கீழ்தான் செயல்பட வேண்டும் என்று மற்றொரு பிரிவினரும் கூறிவருகிறார்கள். உண்மையில் பொறுப்புக்குழு தலைவருக்கே பவர் அதிகம் என்கிறார்கள் சீனியர்கள்.
 

 

dmk



கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேனி ஒன்றியத்தைத் தவிர மற்ற ஏழு ஒன்றியங்களையும் அ.தி.மு.க.விடம் பறிகொடுத்த நிலையில் இன்னமும் ஒன்றுபட்டு செயல்படும் அளவுக்கு சரியான தலைமை தேனி மாவட்ட தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை. மாவட்டத்தில் ஆறு கோஷ்டிகள் என்றால், அந்தந்த ஒன்றியங்களில் அதைக்காட்டிலும் அதிகமான கோஷ்டிகள் உருவாகி வருகின்றன. கட்சி வளருகிறதோ இல்லையோ, கோஷ்டிகளின் வளர்ச்சிக்கு குறைச்சலில்லை என்று பொருமுகிறார்கள் உடன்பிறப்புகள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.