ADVERTISEMENT

3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகள் அதிமுக வசம் செல்லும்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்...

03:52 PM Apr 18, 2019 | kirubahar

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தமிழகத்தில் தொடங்கிய தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது. 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவிக்களை செயலிழக்கச் செய்ய அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கில் காவல்துறை பாதுகாப்பை திரும்பப்பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறி தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT