Skip to main content

தி.மு.க.வால் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை- ஜி.கே.வாசன் பேச்சு!

Published on 10/11/2019 | Edited on 10/11/2019

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று (09/11/2019) வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க, ஏகமனதான தீர்ப்பால் நாட்டில் ஒற்றுமை வலுப்பெறும். இதுவரை இருந்து வந்த மனக்கசப்பு முடிவுக்கு வந்துள்ளது. கோயில் கட்டுவதற்கு அதே இடத்தை ஒதுக்கியும், மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தீர்வு சிறந்த வழிமுறையாகும். 


அதனை அனைத்து தரப்பு மக்களும் ஏற்று, ஒற்றுமை வலுப்பெற செய்ய வேண்டும். காவி மயம் என்பது குறித்து ரஜினிகாந்த் கூறியது அவரது சொந்த கருத்து. அவர் பொது வாழ்வில் வரவில்லை, தனிக்கட்சி துவங்கவில்லை, அவரது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசுவதற்கு ஏதுமில்லை. அண்மையில் பிரதமரை சந்தித்தபோது தமிழகத்தின் நலனுக்கான திட்டங்கள், முக்கிய பிரச்னைகளில் தமிழகத்துக்கான சிக்கல்களை தெரிவித்தேன்.


காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி, கமாண்டோ பாதுகாப்பு திரும்பபெறப்பட்டாலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசே தெளிவான விளக்கம் அளித்துள்ளதால் விமர்சிக்க ஏதுமில்லை. பண மதிப்பிழப்பால் மட்டும் பொருளாதார பின்னடைவு ஏற்படவில்லை. உலக அளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவு என்பதை பிரதமர், நிதி அமைச்சர் விளக்கி உள்ளனர். பாஜக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதால் தான் கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் கிடைத்துள்ளது.
 

DMK PARTY RELATED ERODE GK VASAN SPEECH



 

உள்ளாட்சி தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் போனதற்கு திமுக தான் காரணம். இந்த தேர்தலை நடத்த அதிமுக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா சந்திக்கிறது. தமாகா சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை துவக்கிவிட்டோம். கடந்த ஒரு மாதமாக அந்தந்த பகுதியில் நிர்வாகிகள் மூலம் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம்.


வரும் 22, 23, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக இதற்கான ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. வரும் 22 ஆம் தேதி திருச்சியில் 25 மாவட்டங்களுக்கும், 23 மற்றும் 25 ஆம் தேதி சென்னையில் மீதமுள்ள மாவட்டங்களுக்குமான நிர்வாகிகளை சந்தித்து போட்டியிடுவது தொடர்பாக விவாதிக்க உள்ளோம்" என கூறினார் ஜி.கே.வாசன். பேட்டியின் போது பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி தலைவர் எம்.யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர். 

தி.மு.க.வால் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை- ஜி.கே.வாசன் பேச்சு!


ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று (09/11/2019) வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க, ஏகமனதான தீர்ப்பால் நாட்டில் ஒற்றுமை வலுப்பெறும். இதுவரை இருந்து வந்த மனக்கசப்பு முடிவுக்கு வந்துள்ளது. கோயில் கட்டுவதற்கு அதே இடத்தை ஒதுக்கியும், மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தீர்வு சிறந்த வழிமுறையாகும். 


அதனை அனைத்து தரப்பு மக்களும் ஏற்று, ஒற்றுமை வலுப்பெற செய்ய வேண்டும். காவி மயம் என்பது குறித்து ரஜினிகாந்த் கூறியது அவரது சொந்த கருத்து. அவர் பொது வாழ்வில் வரவில்லை, தனிக்கட்சி துவங்கவில்லை, அவரது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசுவதற்கு ஏதுமில்லை. அண்மையில் பிரதமரை சந்தித்தபோது தமிழகத்தின் நலனுக்கான திட்டங்கள், முக்கிய பிரச்னைகளில் தமிழகத்துக்கான சிக்கல்களை தெரிவித்தேன்.


காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி, கமாண்டோ பாதுகாப்பு திரும்பபெறப்பட்டாலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசே தெளிவான விளக்கம் அளித்துள்ளதால் விமர்சிக்க ஏதுமில்லை. பண மதிப்பிழப்பால் மட்டும் பொருளாதார பின்னடைவு ஏற்படவில்லை. உலக அளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவு என்பதை பிரதமர், நிதி அமைச்சர் விளக்கி உள்ளனர். பாஜக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதால் தான் கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் கிடைத்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் போனதற்கு திமுக தான் காரணம். இந்த தேர்தலை நடத்த அதிமுக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா சந்திக்கிறது. தமாகா சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை துவக்கிவிட்டோம். கடந்த ஒரு மாதமாக அந்தந்த பகுதியில் நிர்வாகிகள் மூலம் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம்.


வரும் 22, 23, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாக இதற்கான ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. வரும் 22 ஆம் தேதி திருச்சியில் 25 மாவட்டங்களுக்கும், 23 மற்றும் 25 ஆம் தேதி சென்னையில் மீதமுள்ள மாவட்டங்களுக்குமான நிர்வாகிகளை சந்தித்து போட்டியிடுவது தொடர்பாக விவாதிக்க உள்ளோம்" என கூறினார் ஜி.கே.வாசன். பேட்டியின் போது பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி தலைவர் எம்.யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.