தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரம் துவங்குவதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்றுஆசி பெற்று மரியாதை செலுத்தினர்.