Skip to main content

“காமராஜர், கலைஞர் வரிசையில் முதல்வர் ஸ்டாலின்!” - அமைச்சர் ஐ.பெரியசாமி  

Published on 20/05/2022 | Edited on 20/05/2022

 

DMK one year meeting i periyasamy speech

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதி திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ தலைமையில் நிலக்கோட்டையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பழனிமாணிக்கம் சிறப்புரையாற்றினார். அதன்பின் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “பெரியார், அண்ணா, கலைஞர் என மூன்று பேரும் ஒருசேர திராவிட மாடல் ஆட்சியை தமிழக முதல்வர் வழங்கிக் கொண்டிருக்கிறார். பள்ளிக் கல்வித் துறையில் சத்தமில்லாமல் பல சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. காமராஜர் மதிய உணவு கொண்டு வந்தார். கலைஞர் சத்துணவில் முட்டை கொண்டுவந்தார். அந்த வரிசையில் இந்தியாவில் முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி எனும் புதியத் திட்டத்தை கொண்டுவந்து தமிழக முதல்வர் தன்னிகரில்லாத முதல்வராக திகழ்கிறார். 

 

ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் தமிழகம் முழுதும் கூட்டுறவு கடன் சங்கங்களில் இதுவரை 6 லட்சம் புதிய விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ரூ. 900 கோடி வரை கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடி பெறுபவர்கள் பட்டியலிலும், விவசாய கடன் தள்ளுபடி பெற்றவர்கள் பட்டியலிலும் அதிமுகவினர் நடத்திய முறைகேடுகள் கொஞ்சநஞ்சமல்ல. தோண்டத் தோண்ட ஊழல்கள் வந்து கொண்டே இருந்தது. உதாரணத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் நகையே இல்லாமல் நகை கடன் தள்ளுபடி லிஸ்ட் தயார் செய்யப்பட்டது. வட மாவட்டத்தில் ஒரே நபர் பெயரில் 650 நகைகள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக மணலி ஊராட்சியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் அரசுப்பள்ளி நிலத்தின் சர்வே நம்பரை கொடுத்து 85 ஆயிரம் விவசாய கடன் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரசாங்கத்திடம் தள்ளுபடி பணத்தை பெற்று அதிமுகவினர் பங்கு போட நினைத்ததை தடுத்து நிறுத்தி உரிய ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்பட்டது”  என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்