Skip to main content

தி.மு.க எந்த வகையிலும் ஆட்சிக்கு வந்துடக் கூடாது...பாஜகவின் அதிரடி திட்டம்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

கிருஷ்ண பரமாத்மாவையும் அர்ஜுனனையும் அமித்ஷாவோடும் மோடியோடும் ஒப்பிட்டு, ரஜினி பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்கா பேசப்பட்டு வருகிறது. இது பற்றி விசாரித்த போது, ரஜினிக்கு அமித்ஷாவும் மோடியும் தொடர்ந்து முக்கியத்துவம் தர்றாங்க. அதனாலதான், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் "லிசனிங் லேர்னிங் அண்ட் லீடிங்' அப்படிங்கிற புத்தக விழாவிலும் பேசும் வாய்ப்பைக் கொடுத்தாங்க. விழாவில் அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுச்சுனு சொல்லப்படுகிறது.  எப்படியாவது 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடி, ரஜினியைத் தீவிர அரசியலுக்கு கொண்டுவந்துடணும்னு பா.ஜ.க. நினைச்சி வியூகம் வகுக்குது.

 

bjp



வெங்கையா நாயுடு புத்தக விழாவில் கலந்துக்கிட்ட ரஜினி, காஷ்மீரின் சிறப்பு சலுகைகளை ரத்து செய்த காரணத்துக்காக அமித்ஷாவைப் பாராட்டு மழையில் நனைச்சிட்டார். இதனால் தான் கண்டுவரும் கனவுகள் விரைவில் தமிழகத்தில் பலிச்சிடும்னு பா.ஜ.க. நம்புது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, தி.மு.க. எந்த வகையிலும் ஆட்சிக்கு வந்துடக் கூடாதுங்கிறதுதான் முக்கிய இலக்கு. தி.மு.க.வின் வெற்றியைத் தடுத்தால், அ.தி.மு.க.வைத் தங்கள் விருப்பம்போல இயக்கலாம். அதை ரஜினி மூலமா செய்யலாம்னு நினைக்குது. தங்கள் கொள்கையோடு ஒத்துப்போகக்கூடிய ரஜினியை தீவிர அரசியலுக்குக்  கொண்டு வருவதற்கு பல ப்ளான் போடப்பட்டிருக்கு. ரஜினி புதுப்புது படங்களை ஒத்துக்கிட்டாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் களத்தைச் சந்திப்பேன்னும் சொல்லிக் கிட்டு இருக்கார். 


 

 

bjp



அதோட நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிவு வந்த பிறகும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்தார். இப்ப நடந்து முடிஞ்ச வேலூர் இடைத் தேர்தலிலும் ரஜினி மக்கள் மன்றத்தினர், ரஜினியிடமிருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் இரட்டை இலைக்கு வாக்களிக்கணும்னு கூட்டம் போட்டுப் பேசியதோடு, பா.ஜ.க.வுக்கு நெருக்கமான இலை வேட்பாளர் ஏ.சி.எஸ்.சுக்கு ஆதரவா வாக்கு சேகரித்தாங்க. இதையெல்லாம் கவனிச்சித்தான், ரஜினியை மையமாக்கி, ஒரு அரசியல் மாற்றத்தை இங்கே ஏற்படுத்த பா.ஜ.க. விரும்புது. ரஜினியை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அரசியல் கட்சியைத் தொடங்க வைச்சி, அதோடு அ.தி.மு.க. கூட்டணி அமைச்சா அது தி.மு.க.வுக்கு எதிரான பெரிய அணியா இருக்கும்ன்னு பா.ஜ.க. கணக்குப்போடுது. 

 

bjp



அப்படி நடந்தால், பா.ஜ.க. நேரடி கூட்டணியில் இல்லாமல், திரைமறைவில் இருக்குமாம். ஒருவேளை, ரஜினியை முதல்வர் வேட்பாளரா ஏற்க அ.தி.மு.க. சீனியர் தலைவர்களும் நீண்டகாலத் தொண்டர்களும் விரும்பாமல் போனால், ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தி, அதை ரஜினியும் பா.ஜ.க.வும் இணைந்த கூட்டணியுடன் சேர்த்து, தேர்தலை சந்திப்பதுன்னும் கணக்கு போடப்பட்டிருக்கு. எப்படிப் பார்த்தாலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ரஜினிதான் கிருஷ்ணராக கூட்டணித் தேரை ஓட்டப் போகிறார். சென்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அமித்ஷா ரஜினியை, தான் தங்கியிருந்த கவர்னர் மாளிகைக்கு அழைத்தாராம். அங்கே சந்திப்பது சரியா இருக்காதுன்னு ரஜினி மறுத்துட்டாராம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.