Skip to main content

"புதுச்சேரியில் 30 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் இந்த மேடையிலே தற்கொலை செய்துகொள்வேன்" - ஜெகத்ரட்சகன் 

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

DMK MP Jagathratchekan speech at pondicherry about pondicherry assembly election


2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த சூழலில், கடந்த 6 மாதமாக புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து வந்த தி.மு.க.வினர் காங்கிரசுடன் இணக்கமாக இல்லை.

 

தொடர்ந்து சில மாதங்களாக காங்கிரஸ் அரசுக்குப் பல்வேறு விதமாக எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ‘தி.மு.க. தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம்’ என்ற முழக்கத்தோடு புதுச்சேரி தி.மு.க.வினர் செயல்பட்டு வந்த நிலையில், புதுச்சேரி நூறு அடி சாலையில் அமைந்துள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டர் என்ற தனியார் திருமண மண்டபத்தில் புதுச்சேரி மாநில தி.மு.க நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (18.01.2021) நடைபெற்றது.

 

புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில், புதுச்சேரி தி.மு.க மேலிட பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் அனைவரும் வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றும், புதுச்சேரி காங்கிரஸ் எந்தவித நலத்திட்டங்களையும் செய்யவில்லை. புதுச்சேரி பின்னோக்கி சென்றது. அதனைப் போக்கும் வகையில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்றும் பேசினர்.

 

தொடர்ந்து தி.மு.க. மேலிட பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசும்போது, "எங்கு பார்த்தாலும் கருப்பு சிவப்பு வண்ணம் தெரிகிறது. கலைஞருக்கு அதிகம் பிடித்த ஊர் புதுச்சேரி. புதுச்சேரியில் யார் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார். புதுச்சேரிக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள். புதுச்சேரி மக்கள் நல்லா இருக்க வேண்டும். விவசாயம் பொய்த்து போய்விட்டது. புதுச்சேரி எவ்வளவு பெரிய கடற்கரை. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம். புதுச்சேரியில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைக்கும்” என்றார். 
 

மேலும் உச்சகட்டத்துக்கு சென்ற அவர், "புதுச்சேரியில் 30 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறவில்லை எனில் இந்த மேடையிலே தற்கொலை செய்து கொள்வேன்" எனத் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது