Skip to main content

“நூறாண்டு கால எம்.எல்.ஏ.க்களில் மிக மோசமான...” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

dmk mkstalin speech at virudhunagar district


விருதுநகர் மாவட்டம், பட்டம்புதூரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்று, உரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பெயரை உச்சரிக்காமலேயே, ஒரு பிடிபிடித்தார். மேலும் அவர் பேசியதில், “இந்தத் தொகுதியில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயரைச் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். பஃபூன் மந்திரி என்று சொல்வதா? பலூன் மந்திரி என்று சொல்வதா? அவர் பெயரை நான் சொல்ல மாட்டேன். பெயரைச் சொல்லும் அளவுக்கு அவர் அவ்வளவு தகுதி படைத்தவர் அல்ல. அமைச்சராக இருக்கிறார். தமிழ்நாட்டில் 1920- ஆம் ஆண்டில் இருந்து தேர்தல் நடக்கிறது. அதாவது, கடந்த 100 ஆண்டுகளாக எத்தனையோ தேர்தல்கள் நடந்துள்ளன. இத்தனை தேர்தல்களிலும் வென்றவர்களில் மிக மோசமான அடிமுட்டாள் யார் என்றால், அவர் தான்.

 

இதைப் போன்ற தலைகுனிவு தமிழகத்துக்கு இதுவரை வரவும் இல்லை. இனி வரவும் கூடாது. அவர் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். என்னை ஒருமையில் பேசுகிறார். அசிங்கமாகப் பேசுகிறார். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தகுதியான ஒருவர் விமர்சித்தால்,  அதைப் பற்றி கவலைப்படலாம். அதற்கு மதித்து பதில் சொல்லலாம். தரம் கெட்டவர்களிலும்,  கேடுகெட்ட ஒருவருக்குப் பதில் சொல்வது எனக்கு அவமானம்.

 

அவர் பெயரைச் சொன்னால் எனக்கு இழுக்கு. அவர் பெயரைச் சொன்னால் இந்த மேடைக்கு இழுக்கு. அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு இழுக்கு. அதனால், அவர் பெயரைச் சொல்லவில்லை. இந்தத் தேர்தலில் அவர் படுதோல்வியடைவார். அதுதான் நடக்கப்போகிறது. நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்.
 

dmk mkstalin speech at virudhunagar district


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில், அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விரைவில் தீர்ப்பு என்று அறிவித்துள்ளார்கள் நீதிபதிகள்.

 

நீதிமன்றத் தீர்ப்பு என்னவாக வரப்போகிறது என்று எனக்குத் தெரியாது. மக்கள் தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பது நன்றாகத் தெரிகிறது. ஊரை அடித்து உலையில் போட்ட அ.தி.மு.க. அமைச்சர்களை சிறைக்கும்- ஊருக்கு உழைக்கும் தி.மு.க.வை கோட்டைக்கும் அனுப்பும் தேர்தல் தான் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்” என்று அ.தி.மு.க. ஆட்சியையும், குறிப்பாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியையும் கடுமையாகத் தாக்கினார்.

 

இந்தப் பரப்புரையின்போது, ‘விருதுநகர் மாவட்ட பிரச்சனைகளை விளக்கும் குறும்படம்’ என்ற பெயரில் குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில், ராஜேந்திரபாலாஜியின் சிவகாசி தொகுதியை மட்டுமே குறிவைத்து, அத்தொகுதியில் நிலவும் சுகாதாரக் கேடு, சேதமடைந்த சாலைகள், குடிநீர்த் தட்டுப்பாடு, வாறுகால் வசதி போன்றவை இல்லையென்று, பொதுமக்கள் குற்றம்சாட்டும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. மேலும், சிவகாசி தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான ரயில்வே மேம்பாலத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பதையும், அக்குறும்படம் சுட்டிக்காட்டியது. 

 

தொடர்ந்து தன்னைக் கடுமையாக விமர்சித்துவரும் ராஜேந்திரபாலாஜி மீதான மு.க.ஸ்டாலினின் கோபமும், சிவகாசி தொகுதியில் அவரைத் தோற்கடித்தே ஆகவேண்டும் என்ற தி.மு.க.வினரின் ஆவேசமும், இந்த விருதுநகர் மாவட்ட பரப்புரையில், அப்பட்டமாக வெளிப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.