Skip to main content

''அவர ரொம்ப நாளா காணோம்...  இருக்கேன்னு காட்டிக்கொள்வதற்காக ஏதாவது சொல்லி இருப்பார்''-சேகர்பாபு பேட்டி!

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

minister Sekarbabu interview!

 

அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ''ஜனநாயக சுதந்திர நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்ற ஒரு மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலிருந்த நிலைமாறி முழுவதுமாக ஆளும் கட்சி எதிர்க் கட்சியாக நின்று ஒரு தேர்தலைச் சந்தித்தது என்றால் அது இந்த தேர்தலாகத்தான் இருக்கும். ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், ஆட்சி அதிகாரத்தில் திமுக மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி உள்ளது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி உள்ளது. சட்டப்பேரவையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி உள்ளது. மாநகராட்சி, மாவட்டத்திலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிலைநிறுத்தி முதல்வரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். சென்னையைச் சிங்காரச் சென்னையாக ஆக்குகின்ற முயற்சி. எழில்மிகு சென்னை 2.0 என கொண்டு வருகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்போம்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'திருமணம் தாண்டிய உறவை ஆதரிக்கும் ஆட்சி என்பதால் தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிட்டு விட்டார்கள்''என எச்.ராஜா கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு,

 

''அவரே ரொம்ப நாளா காணோம். இருக்கேன்னு காட்டிக்கொள்வதற்காக ஏதாவது சொல்லி இருப்பார். தாலிக்கு தங்கம் என்பது திருமணம் செய்யும்போது கிடைக்க வேண்டிய பொருள். தற்போது நிலுவையில் இருக்கின்ற மனுக்களை அளவை எடுத்துக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதேபோல் அதில் நடந்த தவறுகளையும் சட்டமன்றத்தில் விலாவாரியாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அதேபோல் அதன்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் விலாவாரியாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு பொருளாதார நிலை உயர்ந்தால் தான் திருமணத்திற்கு உண்டான அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்கிக் கொள்ள முடியும். திருமணத்திற்கு முன்பு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவர்களுக்குக் கல்வியை, அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி  தடையாக உள்ள பொருளாதாரத்தை அரசு சார்பில் உயர்த்தி முன்னேற்றி அவர்களே சொந்தக்காலில் சுயமாக சம்பாதித்த பணத்தில் திருமணம் செய்துகொள்வது வரவேற்கப்படுவதா... அல்லது  பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமாக இருக்கின்ற இந்த திட்டத்தை ஆதரிப்பதா?''என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.