Skip to main content

தி.மு.க. நிர்வாகிளைக் கூட்டத்துக்கு அழைக்கும் வேலு -144 தடை உத்தரவை மீறி செயற்குழு கூட்டம்

Published on 24/05/2020 | Edited on 25/05/2020

 

ev velu


கரோனா பரவலை முன்னிட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கான 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இருந்தும் பொருளாதார நடவடிக்கைக்காக கடைகள், தொழில் நிறுவனங்கள், ஆட்டோக்கள், சலூன்கள் மற்றும் சில அத்தியாவசியப் பணிகள், நிறுவனங்களுக்கு இயங்க தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் பொதுக்கூட்டம் மற்றும் அறைக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு பொதுமக்கள் உட்பட யாரும் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 


இந்நிலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிவிப்பில், மே 25ஆம் தேதி காலை 11 மணிக்கு தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட ஊரட்சிக்குழு சேர்மன், ஒன்றியக் குழு தலைவர்கள் ஆகியோர் தவறாமல் வந்து கலந்துக்கொள்ள வேண்டும், தலைவர் - மா.செகள் இடையே நடைபெற்ற வீடியோ கான்பரஸ் மூலம் நடைபெற்ற கூட்டம் பற்றி விவாதித்தல், ஜீன் 3 கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம், கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்க என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம் ஒன்றியங்கள், செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பேரூராட்சிகளில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் வருவார்கள். இப்படித் தெற்கு மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் 100க்கும் அதிகமான நிர்வாகிகள் தி.மு.க. அலுவலகத்திற்கு வந்து கூட்டம் நடத்தவுள்ளனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்தக் கூட்டத்தை எப்படி வேலு நடத்துகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
 


144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்தகூடாது என்கிறபடியால் தான் தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வுக்கு மாநிலம் முழுவதிலும்மிருந்து நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்துக்கு வரவைக்க முடியாது என்பதால் தான், தி.மு.க. தலைவரின் தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் விதியில் திருத்தம் செய்து காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 25ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டமும் வீடியோ கான்பரஸ் முறையில் நடத்தினார். அப்படியிருக்க எப்போதும் அரசின் விதிகளைக் கடைப்பிடிக்க நினைக்கும் வேலு, நாடு முழுவதும் 144 தடை உத்தரவில் அமலில் உள்ள நிலையில் அவசர செயற்குழு கூட்டம் எதற்காக நடத்துகிறார், ஏன் அனைவரையும் நேரில் வரவைக்கிறார் என்கிற கேள்வி எழுந்தள்ளது.


கட்சி கூட்டங்கள், கட்சி அலுவலகத்துக்குள் நடத்த அனுமதியுண்டா என அரசு தரப்பில் நாம் விசாரித்தபோது, கட்சி நிகழ்ச்சிகள் உள்ளரங்க கூட்ட நிகழ்வாக இருந்தாலும் அனுமதியில்லை, கூட்டம் நடத்துவது சட்டப்படி தவறு என்கிறார்கள்.  
 

கூட்டம் நடத்த சிறப்பு அனுமதி ஏதாவது மாவட்ட தி.மு.க. சார்பில் வாங்கப்பட்டுள்ளதா என தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு அனுமதி தேவையில்லை, சமூக இடைவெளியுடன் தான் கூட்டம் நடக்கவுள்ளது என்றார்கள்.
 

http://onelink.to/nknapp


இதுபற்றி பிரபலமான வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டபோது, 144 சட்டப்படி, 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது. அது உள்ளரங்கமாக இருந்தாலும், வெளி நிகழ்ச்சியாக இருந்தாலும் அதுதான் சட்டம். திருமணத்துக்கு 50 பேர், இறப்புக்கு 20 பேர் என அரசு அனுமதி வழங்கியுள்ளது. மற்ற எதற்கும் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. அதனால் தான் ரம்ஜான் சிறப்புத் தொழுகைக்குக் கூட அரசு அனுமதி வழங்கவில்லை. இது கரோனாவுக்கான மருத்துவ ரீதியிலான 144 தடை என்பதால் அரசு நிர்வாகத்துக்குத் தகவல் சொல்லிவிட்டு சமூக இடைவெளியுடன் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படியே உதவிகள் வழங்கப்படுகின்றன. மற்றப்படி 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இப்படிக் கட்சிக் கூட்டம் நடத்துவது சட்டப்படி தவறானது. கூட்டம் நடத்தும் போது, யாராவது புகார் கூறினால் வழக்குப் பதிவு செய்யலாம், அதனால் தான் தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டு பின்னர் அது சர்ச்சையாகி வீடியோ கான்பரன்ஸில் நடைபெற்றது என்றார்.


தி.மு.க. நிர்வாகிகள் ஏதாவது சர்ச்சையில் சிக்குவார்களா என மத்தியில் ஆளும் பாஜகவும் – மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வும் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கின்றன. இந்நிலையில் இந்தக் கூட்டம் சர்ச்சையில் சிக்காமல் இருந்தால் சரி என்கிறார்கள் தி.மு.க. அனுதாபிகள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.