Skip to main content

என்னை கேட்காம எப்படி உதவி செய்யலாம்... எப்ப தேர்தல் வந்தாலும் எனக்கு சீட் வேணும்... தி.மு.க.-வில் நடக்கும் உட்கட்சி அரசியல்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

dmk

 

சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என்பது இப்போது வரை சந்தேகமாக இருந்தாலும், அரசியல் வாதிகளின் காய் நகர்த்தல்கள் ஓயவில்லை.

 

வேலூர் மாவட்ட தி.மு.க.வை சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு, மத்திய, மேற்கு என பிரித்த போது, மேற்கு மா.செவாக தேவராஜ் நியமனம் செய்யப்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டு தலைமையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஜோலார்பேட்டை முத்தமிழ்ச்செல்வி நியமனம் செய்யப்பட்டார். அவரை மாற்றிவிட்டு தங்களில் யாராவது ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமென மாவட்ட பொருளாளர் அண்ணா அருணகிரி, திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி, முன்னால் எம்.எல்.ஏ சூர்யகுமார் என பலரும் முட்டிமோதினர். துரைமுருகனின் சிபாரிசு மீண்டும் தேவராஜ் பக்கமே இருந்தது. தேவராஜை மீண்டும் நியமிக்கக்கூடாது என பல நிர்வாகிகளும் தலைமைக்கு மனு அனுப்பினர். அந்த மனுக்களை ஒதுக்கிவிட்டு சில மாதங்களுக்கு முன்பு தேவராஜ் மீண்டும் மாவட்ட பொறுப்பாளராக்கப்பட்டார். அதன்பிறகு என்ன நிலை என்று கேட்டால், கட்சிக்குள் உள்ளடி கரோனா புகுந்துவிட்டது என்கின்றனர் உடன்பிறப்புகள்.


கட்சி ரீதியாக வேலூர் மேற்கு மாவட்டம் எனச் சொல்லப்படும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கான சீட்டை மீண்டும் பெற்றுவிட வேண்டுமென சிட்டிங் எம்.எல்.ஏ நல்லதம்பி, தி.மு.க. ந.செ ராஜேந்திரன், மாணவரணி மோகன் போன்றவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். ஜோலார்பேட்டையை வாங்கிட கடந்த தேர்தலில் அமைச்சர் வீரமணியை எதிர்த்து உட்கட்சி சதியால் தோல்வியைச் சந்தித்த கவிதா முயற்சி செய்யகிறார். வாணியம்பாடி தொகுதியை வாங்கிவிட மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் முயற்சி செய்கிறார். ஆம்பூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ வில்வநாதன் உள்ளார்.

 

மற்ற தொகுதிகளைவிட ஆம்பூர் தொகுதியைக் குறிவைத்துத்தான் போட்டி பலமாக உள்ளது. அந்தத் தொகுதியை முதலில் அணைக்கட்டு எம்.எல்.ஏவாக உள்ள மத்திய மா.செ நந்தகுமார் பணிகளைத் தொடங்கினார். மாவட்டம் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் ஆம்பூர் சென்றதும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். ஆம்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலின்போதே பேரணாம்பட்டு ஒ.செ. வில்வநாதன், மாதனூர் ஒ.செ சுரேஷ்குமார், திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பியின் அண்ணன் மாவட்ட பொருளாளராகவுள்ள அண்ணா.அருணகிரி போன்றவர்கள் மோதினார்கள். ஆனால் வில்வநாதன் ஜெயிச்சிட்டார். 2021 தேர்தலில் இந்த ஆம்பூரை வாங்கிவிட அண்ணா.அருணகிரி, சுரேஷ்குமார், தொழிலதிபர் சரவணன் உட்பட சிலர் முயற்சி செய்கிறார்கள். அதற்காக தொகுதியில் கரோனா கால நலத்திட்ட உதவிகளை வழங்குறாங்க. இதில் தொகுதி எம்.எல்.ஏவான வில்வநாதனை அழைக்காமலே அவர் ஒ.செ.வாக உள்ள பேரணாம்பட்டு ஒன்றியத்துக்குள் அண்ணா.அருணகிரி போய், கரோனா நலத்திட்ட உதவிகள் தந்தார். அதேபோல் ஆம்பூர் தொகுதிக்குள் வரும் மாதனூர் ஒன்றியத்தில் எம்.எல்.ஏ.-வைப் புறக்கணிப்பது போல் செயல்படுகிறார் சுரேஷ்குமார். இதுதான் மாவட்ட கமிட்டி கூட்டத்தில் வெடிச்சது.

 

dmk

 

கடந்த மே மாத இறுதியில் மாவட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், "என்னை கேட்காமல் என் ஒன்றியத்தில் எப்படி மாவட்ட பொருளாளர் வந்து உதவி செய்யலாம்'' எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல் மாதனூர் ஒ.செ. சுரேஷ்குமார், "என் ஒன்றியத்தில் நான் உதவிகள் செய்துகிட்டு இருக்கும்போது சம்மந்தமேயில்லாமல் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு நிர்வாகிகள் வந்து, என்னிடம் தகவல் சொல்லாம, என் ஒன்றியத்தில் உள்ள அணி அமைப்பாளர்களை வைத்து எப்படி உதவி செய்யலாம்'' என மாவட்ட பொறுப்பாளரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். இதனால் மாவட்ட கமிட்டி கூட்டம் காரசாரமானது, இதுப்பற்றி தலைமைக்கும் புகார் போய்வுள்ளது என்றார்கள்.

 

ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதனிடம் நாம் கேட்டபோது, "என் ஒன்றியத்திற்குச் சம்மந்தமேயில்லாத கட்சி நிர்வாகிகள் வந்து என்னிடம் கூட சொல்லாமல் உதவி செய்ததைத்தான் கேள்வி எழுப்பினேன், கட்சிக்கென ஒரு கட்டுப்பாடு உள்ளது. அதனால் கேள்வியாக எழுப்பினேன்'' என்றார். மாவட்ட பொருளாளர் அண்ணா.அருணகிரியிடம் நாம் கேட்டபோது, "மாவட்ட கமிட்டி கூட்டம் என்பது எங்கள் கட்சி சம்மந்தப்பட்ட விவகாரம் அதுப்பற்றி நான் வெளியே பேச விரும்பவில்லை'' என்றார்.

 

http://onelink.to/nknapp

 

இவர்கள் இப்படி அடித்துக்கொண்டு, உள்ளடி வேலை பார்த்ததால் தான் கடந்த முறை தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் ஏறுவதில் கோட்டைவிட்டது என்கிறார்கள் கட்சியின் விசுவாசிகள். இப்போதே கோஷ்டி சண்டையைத் துவங்கிவிட்டார்கள், தலைமை தலையிடவில்லையென்றால் கடந்த தேர்தலைப் போல் வரும் தேர்தல் எப்போது நடந்தாலும், கட்சியின் வெற்றியை உள்ளடிகள் காலை வாரிவிடும் என்பதே கள நிலவரம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.