Advertisment

"தொகுதிகள் குறித்து நாளை இறுதிச் செய்யப்படும்"- காதர் மொய்தீன் பேட்டி!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையில் ஆர்.எஸ்.பாரதி, ஐ. பெரியசாமி, பொன்முடி குழுவினர் இன்று (28/02/2021) மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீனுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அபூபக்கர், நவாஸ்கனி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், "தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் குறித்து நாளை இறுதிச் செய்யப்படும். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதி என இறுதிச் செய்யப்பட்டு முடிவு எட்டப்படும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டோம் என்பதைக் கூறினோம்" என்றார்.

Advertisment

discussion kadar mohideen tn assembly election 2021
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe