dmk grama sabhai meets

Advertisment

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் 16,500 இடங்களில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த கிராம சபை கூட்டங்கள், ஏறத்தாழ 70 சதவிதம் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் பல இடங்களில் இக்கூட்டங்கள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள உள்ளது.

இந்த கூட்டங்களில் மக்கள் தரும் மனுக்களை வாங்கும் திமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக பிரமுகர்கள், தங்களால் செய்ய முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்யவும் தொடங்கியுள்ளனர்.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட கிரிசமுத்திரம் ஊராட்சியில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ். ஞானவேலன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டுள்ளார்.

Advertisment

இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பெண்கள் உட்பட கிராம பொதுமக்கள் தங்களது ஊராட்சியில் உள்ள குறைகள் குறித்து கூறியுள்ளனர், அதோடு அடிப்படை வசதிகள் கேட்டும் மனு அளித்தனர். அப்படி மனு அளித்தவர்களில் 10 பேர் முதியோர் உதவித்தொகை கேட்டு மனு தந்துள்ளனர்.

அவர்கள் பற்றி விசாரித்தபோது குடும்பத்தாரால் கைவிடப்பட்டு உழைக்க முடியாத நிலையில் உடல்நிலை கொண்டவர்கள் என தெரியவந்தது. அரசின் முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தும் அது இதுநாள் வரை அரசு வழங்கவில்லை என்று கூறியுள்ளனர்.

அதனை கேட்டவர் திமுக சார்பில், உதவி கிடைக்காத 10 முதியோர்களுக்கு தலா ஆயிரம் வீதம் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார் ஒ.செ ஞானவேலன். அந்த முதியோர்களிடம், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவி தொகை அனைவருக்கும் கிடைக்க திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisment

கூட்டத்தின் இறுதியில் அங்கு வைக்கப்பட்டுயிருந்த தீர்மான நோட்டில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என பொதுமக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.