Skip to main content

தி.மு.க. தரப்பில் இருந்து உதவவில்லை என்று சொல்லு... மிரட்டிய அ.தி.மு.க.வினர்... அதிருப்தியில் தி.மு.க.!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

dmk


'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம், நாற்பதே நாட்களில் 18 லட்சம் பேர் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு உதவி பெற்றுள்ளனர். உதவி கிடைத்தவர்கள் கொடுத்து வரும் பேட்டிகள், என்னைப் பெருமை கொள்ளவும், மனநிறைவடையவும் செய்கின்றன'' என 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் வெற்றி குறித்து, தனது அறிக்கையில் குறிப்பிட்டார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். இதற்கு அ.தி.மு.க. ஆளுந்தரப்பு காட்டியிருக்கும் எதிர் வினை, முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
 


தி.மு.க.வின் திட்டத்தால் மாநிலம் முழுவதும் 18 லட்சம் பேர் உதவி பெற்றதோடு, உதவி கோருவோரின் மனுக்களும், மா.செ.க்களின் மூலமாக மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைப்பட்டன. தி.மு.க.வுக்கு இது பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில், உடனடியாக ஒரு ரீடேக் வீடியோவை சோஷியல் மீடியாக்களில் பரப்பியது அ.தி.மு.க. தரப்பு. அதில் காஞ்சிபுரம் மாலா, சிவகங்கை நளாயினி, தூத்துக்குடி முத்துக்காளை, விழுப்புரம் இதயத்துல்லா ஆகிய நான்குபேர், தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் உதவியும், விலையில்லா ரேசன் பொருட்களும் கிடைத்தன. ஒன்றிணைவோம் என்றால் என்னவென்றே தெரியாது. எங்களது பெயரை தி.மு.க.வினர் பயன்படுத்தி, பொய்ப் பரப்புகின்றனர் எனக்கூறி இருந்தனர்.
 

dmk


வீடியோவில் இருந்த சிவகங்கை மாவட்டம், ஒப்பிலான்பட்டியைச் சேர்ந்த நளாயினி, "எஸ்.மாம்பட்டி ரேசன் கடையிலதான் எனக்கு கார்டு இருக்கு. அங்கிருந்து என்னோட கார்டில் திருத்தம் செய்யணும்னு கூப்பிட்டாங்க. அங்கே போனதும், இங்கு வாங்கின பொருட்களை மட்டும் சொல்லுங்க. கணக்குக் காட்டணும்னு சொல்லி வீடியோ எடுத்தாங்க. அதோடு, தி.மு.க. தரப்புல உதவி கேட்கலைன்னு சொல்லு, இல்லைனா இனிமேல் பொருட்கள் வாங்க முடியாதுன்னு மிரட்டினாங்க. உண்மையில் முதலில் உதவியது தி.மு.க.காரங்கதான்'' என்றார் பரிதாபமாக. இதுபோலவே மற்றவர்களையும் ரேசன் கடையில் வைத்து வீடியோ எடுத்துள்ளார்கள்.
 

 

 

இதுகுறித்து பேசிய சிவகங்கை தி.மு.க. மா.செ.வும், முன்னாள் அமைச்சருமான திருப்பத்தூர் எம்.எல்.ஏ. பெரியகருப்பன், "அந்தப் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் நிவாரண உதவிகள் செய்த நிலையில், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் உதவிகேட்டு அந்தம்மா வந்தார். அதன்படி, ஒன்றிய து.செ. முத்துகுமார் மூலம் உதவிகள் செய்து கொடுத்தோம். இது வீடியோவாகவும், புகைப்படமாகவும் எங்களிடம் உள்ளது. இது பொறுக்காமல் அ.தி.மு.க. அரசு கீழ்த்தரமான வேலைகளைச் செய்கிறது'' என்றார் ஆவேசமாக.
 

 

dmk


இதுபோலவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆளுங்கட்சியினரால் தூண்டப்பட்ட மாலாவின் நிலை பற்றி எழிலரசன் எம்.எல்.ஏ.வும், விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சரின் ஆதரவாளரை இதயத்துல்லா எனப் பெயர் மாற்றி, தி.மு.க.வுக்கு எதிராகப் பேச வைத்திருப்பதை அந்த மாவட்ட தி.மு.க. நிர்வாகத்தினரும் அம்பலப்படுத்தியுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.