Skip to main content

கவுரவப் பிரச்சனையில் சேர்மன் பதவியை தொலைக்கப் போறாங்களே... திமுகவுக்கு கிடைத்த வாய்ப்பு!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

கூட்டணி பிளவால், குமரி மேற்கு மாவட்டத்தில் பின்னடைவைச் சந்தித்த தி.மு.க.வுக்கு, சேர்மன் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பைத் தந்தி ருக்கிறது திருவட்டார் ஒன்றியம். மொத்தமுள்ள 12 வார்டுகளில் தி.மு.க. 5, அ.தி.மு.க. 3, காங்கிரஸ் 2, பா.ஜ.க., கம்யூனிஸ்ட் தலா ஒரு இடத்தைப் பிடித்தன.
 

dmk



கம்யூனிஸ்டின் தயவுடன் சேர்மன் பதவிக்கு மோதலாம் என்று தி.மு.க. எண்ணியிருக்கிறது. ஆனால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து குலுக்கலில் கொண்டுவிடும் திட்டத்தில் இருக்கிறது காங்கிரஸ். இதை முறியடிக்க, சேர்மன் கோதாவில் இருக்கும் தி.மு.க.வின் பிரேமசுதாவும், ஜெகநாதனும் காங்கிரஸ் மாவட்டத் தலைவரான ராஜேஸ்குமாரிடம் முறையிட்டனர். அவர், "உங்க மா.செ. மனோதங்கராஜை எங்கிட்ட நேரில் வந்து பேசச்சொல்லுங்க'' என்று அனுப்பிவிட்டார்.

மனோ தங்கராஜோ, "என்னால வலிய போயெல் லாம் பேசமுடியாது. காங்கிரஸ் அ.தி.மு.க.வை ஆதரிச்சு, அதனால குலுக் கல் வரும்னா அதையும் பார்த்துக்கலாம்'' என கூறிவிட்டார். தி.மு.க. கவுன் சிலர்களோ, "கிடைக்கிற ஒரேயொரு சேர்மன் பதவியையும் கவுரவப் பிரச்சனையில் தொலைக்கப் போறாங்களே' என்று புலம்புகிறார்கள்.


இதற்கிடையில் காங் கிரஸ், பா.ஜ.க. உறுப்பினர் களிடம் பிரேமசுதாவே நேரடியாக பேரத்தில் இறங்கிவிட்டார். சேர்மன் பதவிக்காக செலவு பண்ண மாட்டேனா? எனக் கிளம்பியிருக்கும் ஜெகநாதன், மா.செ. மனோதங்கராஜின் ஜென்ம பகையாளியான கிழக்கு மா.செ. சுரேஷ்ராஜனிடம் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இன்னொருபுறம், தி.மு.க.வை வரவிடக் கூடாது என்ற நோக்கத்தில், பா.ஜ.க. கூட்டணி யோடு, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டையும் இணைத்து, காங் கிரஸுக்கு வைஸ் சேர்மன் பதவியுடன், கைநிறைய கொடுக்கவும் பேசிவருகிறார் அ.தி.மு.க. ஜான் தங்கம்.

10 வார்டுகள் இருக்கும் தக்கலை ஒன்றியத்தில், 5 உறுப்பினர்களுடன் மெஜாரிட்டியாக இருப்பதால் சேர்மன் பதவியைத் தக்கவைக்க நினைக்கிறது பா.ஜ.க. 4 உறுப்பினர்களைக் கொண்டி ருக்கும் காங்கிரஸ், தி.மு.க.வின் ஒரே கவுன்சிலரான மவுண்ட் தேன்ரோஜா மனசுவைத்தால், குலுக்கலுக்கு கொண்டு போகலாம். லக் அடித்தால் தலைவராகலாம் என்று அடிப் போடுகிறது.


கூட்டணிப் பூசலில், பா.ஜ.க.வுக்கு பச்சைக்கொடி காட்ட தி.மு.க. மா.செ. மனோ தங்கராஜ் முடிவு செய்திருக்கிறார். பொன்னாரும் மவுண்ட் தேன்ரோஜாவுக்கு வைஸ் சேர்மன் பதவி தருவதாக பேசியிருக்கிறார். காங்கிரஸின் கிறிஸ்டி ஜெகதாவோ, "குலுக்கலில் லக் அடித்தால் நான் சேர்மன், நீங்க வைஸ் சேர்மன். அதுபோக கைநிறைய தர்றேன்' என்று தேன்ரோஜாவிடம் உத்தரவாதம் தந்திருக்கிறார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

ஓய்ந்தது பிரச்சாரம்; முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை மஞ்சள் மற்றும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் கட்சினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைத் திரட்டினர். இதனால் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோருக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் ரூ.350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் சென்றால் போதுமானது. தினக்கூலியாக 300 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுபோக சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. குடிமகன்களுக்கு மதுவும் வாங்கி தரப்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பவானிசாகர் கிராமப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.