Skip to main content

திமுக பொதுக்குழு! துணைப் பொதுச்செயலாளர்களில் மாற்றம்!

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

DMK General Committee! Change in deputy general secretaries!

 

திமுக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். கடந்த 6 மாதங்களாக நடந்த திமுகவின் உள்கட்சித் தேர்தல் 99 சதவீதம் நடந்து முடிந்து விட்டது. இனி, திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான தேர்தல் வருகிற 7-ந் தேதி நடக்கிறது. 

 

தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் மு.க.ஸ்டாலின். அதற்கான மனுத்தாக்கலை 7-ந் தேதி காலையில் தாக்கல் செய்கிறார். திமுகவின் சட்ட விதிகளின் படி மு.க.ஸ்டாலினின் மனு முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது.  பொதுச்செயலாளர், பொருளாளருக்குரிய மனுக்களும் ரெடியாகின்றன. 

 

மேற்கண்ட பதவிகளுக்கு போட்டியிருக்காது என்பதால் போட்டியின்றி அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார். இதன் மூலம், இரண்டாவது முறையாக தலைவராகிறார் ஸ்டாலின். குறிப்பாக, முதலமைச்சராக பொறுப்பில் இருக்கும் போது ஸ்டாலின் தலைவராவதால் திமுகவினர் மிக கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். தலைவர் உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வருகிற 9-ந் தேதி நடக்கவிருக்கும் திமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் இதற்காக ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு, துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு  நியமனம் நடக்கும்.

 

அந்த வகையில், துணைப் பொதுச்செயலாளர்கள் நியமன விதிகளில் மாற்றம் கொண்டு வர கட்சி மேலிடம் திட்டமிட்டிருப்பதாக திமுக சீனியர்களிடம் எதிரொலிக்கிறது. குறிப்பாக, திமுகவின் தற்போதைய சட்டவிதிகளின் படி, 5 துணைப் பொதுச்செயலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 7-ஆக உயர்த்த திட்டமிடப்படப்பட்டுள்ளது.

 

இது குறித்து திமுகவில் நாம் விசாரித்தபோது, “திமுக சட்டவிதிகளின் படி 5 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர் மகளிராகவும், ஒருவர் தாழ்த்தப்பட்டோர் இனத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். மற்ற மூவரும் பொது கேட்டகிரியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும். அந்த வகையில், தற்போது, 5 துணைப் பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய 5 பேர் இருக்கிறார்கள். இவர்களில் அந்தியூர் செல்வராஜ் தலித் பிரதிநிதித்துவத்திலும், சுப்புலட்சுமி ஜெகதீசன் மகளின் பிரதிநிதித்துவத்திலும் நியமிக்கப்பட்டவர்கள்.

 

மற்ற மூவரும் பொது கேட்டகிரியில் நியமிக்கப்பட்டாலும், ஆ.ராசா, தாழ்த்தப்பட்டோர் சமூகம் என்பதால் அவரை அந்த சமூகத்தினராகவே பார்க்கப் படுகிறார். அதாவது, 5 துணைப் பொதுச்செயலாளர்களில் தலித் சமூகத்துக்கு 2 பிரதிநிதித்துவமா? மற்ற சாதியினருக்கு என்ன வாய்ப்பு? என்றெல்லாம் சீனியர்களிடம் தொடர்ச்சியான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், மற்ற சமூகத்தினரை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் துணை பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை 7 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படலாம்” என்று சுட்டிக்காட்டுகிறார்கள் சீனியர்கள்.

 

துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், அதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்று மேலும் நாம் விசாரித்தபோது, “தற்போது இருக்கும் 5 துணைப் பொதுச்செயலாளர்களில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அந்த  இடத்துக்கு ஒரு மகளிரை நியமிக்க வேண்டும். அந்த வகையில், அந்த இடத்துக்கு கனிமொழி மற்றும் கீதா ஜீவன் ஆகியோரிடையே போட்டி இருக்கிறது. இதைத் தவிர மேலும் சில மகளிர் வி.வி.ஐ.பி.க்களும் முயற்சியில் இருக்கிறார்கள். 

 

மகளிர் பிரதிநிதித்துவத்தை அடுத்து மற்ற 4 துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் தற்போது இருப்பவர்களே மீண்டும் நியமிக்கப்படுவார்கள். அதே சமயம், சுப்புலட்சுமி ஜெகதீசன் கொங்கு வேளாளர் என்பதால் அந்த சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று பேச்சு எழுந்தது. அப்படி கொடுத்தால், வன்னியர் சமூகம், நாயுடு சமூகம் உள்ளிட்டவர்களிடம் அதிருப்தி உருவாகலாம். அதனால், கொங்கு வேளாளர் சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் போல, வன்னியர் மற்றும் நாயுடு இனத்துக்கும் பிரதிநிதித்துவம் வழங்கலாம் என யோசிக்கிறார்கள். 

 

அந்த வகையில், “துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 5-லிருந்து 7 ஆக உயர்த்தும் பட்சத்தில், கொங்கு வேளாளர் சமூகத்துக்கு 1 இடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு சக்கரபாணி, சாமிநாதன் இடையே போட்டி உருவாகியிருக்கிறது. மீதமுள்ள 1 இடத்தை வன்னியருக்கு கொடுத்தால் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கும், நாயுடு சமூகத்துக்கு கொடுத்தால் அமைச்சர் எ.வ.வேலுக்கும் வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள் திமுகவின் மேலிடத்தோடு தொடர்புடையவர்கள்.  

 

துணைப் பொதுச்செயலாளர்கள் மட்டுமல்லாமல் துணை அமைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆலோசித்து வருகிறது திமுக தலைமை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.