Skip to main content

கம்யூனிஸ்டுகளை ஒதுக்குகிறதா திமுக..? முத்தரசன் பரபரப்பு அறிக்கை..!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

Is DMK excluding communists Mutharasan

 

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தங்களுக்கான கூட்டணியை இறுதி செய்யும் இறுதிக்கட்டத்தில் தொடர்ந்து பயணிக்கின்றன. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதேபோல், திமுக கூட்டணியில் பிரதான கட்சியான காங்கிரஸ் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகளுக்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரட்டை இலக்கு தொகுதிகள், அதாவது குறைந்தபட்சம் ஒவ்வொரு கட்சிக்கும் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், திமுக தரப்பில் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 5 முதல் 6 சீட்டுகள்தான் தரமுடியும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், ‘இவ்வளவு காலம் திமுக கூட்டணியில் இருந்த நமக்கு, திமுக ஒரு மரியாதைக்குரிய பேச்சுவார்த்தையை நடத்தவில்லை’ என ஆதங்கத்தோடு உள்ளார்கள். 3ம் தேதி இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றாக கூடி பேசியுள்ளார்கள். அதில், ‘இந்திய அளவில் மதசார்பற்ற ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும் என தொடர்ந்து நாம் குரல் கொடுத்து வருகிறோம். குறிப்பாக, தமிழகத்தில் திமுக தலைமையில் நீண்டகாலமாக பயணித்து வந்தோம். அரசியலில் தேர்தல் நிலைப்பாடு மிக முக்கியமான ஒன்று. அந்த அளவில் தொடர்ந்து நாம் பெற்றுவந்த மரியாதைக்குரிய இடங்களைப் பெற வேண்டும். அப்படி இல்லை என்றால் நமக்கான மாற்று நிலையை எடுக்கலாம்’ என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளார்கள். ஆனாலும் இன்னும் காலம் இருக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம். திமுக நமக்கான மரியாதைக்குரிய இடங்களை வழங்கும்’ என அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசியுள்ளார்கள். இறுதியில் இந்தத் தேர்தலில் நாம் போட்டியிட்டு, வெற்றிபெற்று, ஓரிரு இடங்களைப் பெறுவது மட்டுமே லட்சியம் இல்லை. நமது நோக்கம், இந்தத் தேர்தலால் சிதைந்துவிடக்கூடாது என மூத்த நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

அதன் அடிப்படையில், ‘திமுக இனிமேல் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தினாலும், பேரம் பேசுவது இருக்கக் கூடாது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 10 இடங்களை ஒதுக்குவதாக இருந்தால் பேசுவோம். இல்லையென்றால் தார்மீக அடிப்படையில் நாம் இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமோ, அதை தெரிவிப்போம் அல்லது மாற்று நடவடிக்கையாக, எந்த அணியில் நாம் இணைவது என்பதும் பேசி முடிவு செய்வோம்’ என இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

இதன் தொடர்ச்சியாக 4ம் தேதி காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற உள்ளது. அதில் பேசக்கூடிய முக்கிய விஷயம், ‘கம்யூனிஸ்ட் கட்சிக்கான மரியாதைக்குரிய இடங்களை திமுக தர வேண்டும். இல்லையெனில் இந்தத் தேர்தலில் நாம் மக்களிடம் செய்ய வேண்டிய பிரச்சாரத்தை செய்வோம், தேர்தல் அரசியல் முக்கியமல்ல, கட்சிக்கான மரியாதைதான் முக்கியம்’ என கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளார்கள். இதன் மூலம் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தர வேண்டிய மரியாதையைக் குறைத்து மதிப்பிடுகிறது என வெளிப்படையாக தெரிகிறது. இதனால், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் திமுக ஒதுக்குகிறது என அக்கட்சிகளின் நிர்வாகிகள் மனக் குமுறலுடன் தெரிவிக்கிறார்கள்.

 

இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ''தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் - தி.மு.க.வுக்கு இடையில் சிக்கல் நிலவுவது போலவும், பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்படுவது போலவும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றன.

 

அத்தகைய செய்திகளில் உண்மை இல்லை என்பதுடன், அது குழப்பம் ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்திக்கொள்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக தொடர்கிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.