Skip to main content

வேல்யாத்திரை: நாடகம் நடத்தும் அதிமுக – பாஜக... குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள்

Published on 17/11/2020 | Edited on 17/11/2020
DMK Complaint against BJP's Vel Yatra and ADMk

 

பா.ஜ.க. தமிழக தலைவர் முருகன், தமிழர் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுக்கு தரிசனம் செல்லும் வகையில் வேல்யாத்திரை நடத்தவுள்ளதாக அறிவித்தார். நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி முடியும் வகையில் பயண திட்டம் அறிவிக்கப்பட்டது.

 

இது வேல்யாத்திரையல்ல, அரசியல் யாத்திரை. இந்த யாத்திரை மூலம் தமிழகத்தில் மத மோதல் ஏற்படுத்த துடிக்கிறார்கள் என பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. இதனால் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, கரோனாவை காரணம் காட்டி அனுமதி தரவில்லை.

 

அனுமதி வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது பாஜக, அனுமதி தரக்கூடாது என சிலர் மனு தாக்கல் செய்தனர். இரண்டு மனுக்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறியது நீதிமன்றம். தமிழக காவல்துறை, அனுமதி வழங்க முடியாது எனச்சொல்லியது.

 

இந்நிலையில் திட்டமிட்டபடி காவல்துறை அனுமதியில்லாமல் கடந்த நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில், பாஜக தலைவர் முருகன் வேல்யாத்திரையை தொடங்க, கைது செய்யப்பட்டு, ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்து, பின்னர் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விடுவித்தனர். தினம் ஒரு முக்கிய நகரத்தில் வேல்யாத்திரை நடத்த முயல அங்கு கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவது வழக்கமாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வேல்யாத்திரைக்கு விடுமுறை அளித்திருந்தது பாஜக.

 

நீங்கள் வேல் யாத்திரை நடத்துங்கள், நாங்கள் கைது செய்வது போல் கைது செய்து விடுவிக்கிறோம், மீண்டும் மறுநாள் அதேபோல் யாத்தரை நடத்துங்கள், கைது செய்து பின் மாலை விடுவிக்கிறோம் என தமிழகத்தை ஆளும் அதிமுகவும் – பாஜகவும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளார்கள் என எதிர்கட்சிகள் பலவும் குற்றம் சாட்டுகின்றன. அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போலவே தமிழக காவல்துறையும் – தமிழக பாஜகவும் நடந்துக்கொள்கின்றன.

 

நவம்பர் 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை நகரில் இருந்து பாஜக தலைவர் முருகன், வேல்யாத்திரை நடத்துவதாக கூறியுள்ளார். அதற்காக நகரம் முழுவதும் பாஜகவினர் போஸ்டர் ஒட்டி, கொடிகள் நட்டுள்ளனர்.

 

DMK Complaint against BJP's Vel Yatra and ADMk


இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று 17.11.2020 ம் தேதி திருவண்ணாமலையில் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்த  இருக்கும் வேல் யாத்திரையில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் நாகராஜன் ஐ.பி.எஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் காமினி, ஐ.பி.எஸ் மேற்பார்வையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர், 12 துணை காவல் கண்காணிப்பாளர்கள், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் உட்பட மொத்தம் 1,195 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என அறிவித்துள்ளனர்.

 

வேல் யாத்திரைக்கு அரசாங்கமோ, காவல்துறையோ அனுமதி தரவில்லை. மத்திய – மாநில அரசுகளின் கரோனா கால விதிமுறைகளின்படி, மத, அரசியல் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. அப்படியிருக்க திருவண்ணாமலையில் பாஜக வேல் யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், முன்கூட்டியே கைது செய்ய முகாந்திரம் இருந்தும் அதனை செய்யாமல் 1,000த்திற்கும் மேற்பட்ட போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வேல்யாத்திரை தொடங்கி சிறிது தூரம் சென்றபின் கைது செய்வோம் என்பதை பொதுமக்களும் நாடகமாகவே காண்கிறார்கள்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய எதிர்கட்சியினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.