Skip to main content

“இரயில்வே இருப்பு பாதை அமைப்பேன்” - தி.மு.க வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
DMK candidate Arun Nehru has confirmed that he will build a reserve railway lin

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் அருண் நேரு போட்டியிடுகிறார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி கிராமம், கிராமமாக சென்று வாக்குகள் சேகரித்தார். சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். இன்று காலையில் லால்குடி ரவுண்டானாவில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் மண்ணச்சநல்லூர் தொகுதி, முசிறி தொகுதி, குளித்தலை தொகுதி, துறையூர் தொகுதி ஆகிய பகுதிகளில் முக்கிய இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பெரம்பலூர் பாலக்கரையில் பிரச்சாரத்தை இன்று மாலை நிறைவு செய்கிறார். சென்ற இடமெல்லாம் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவுக்கு பொதுமக்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது  பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசியதாவது, “பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலுள்ள விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழகத்திலேயே 3ஆவது பெரிய ஏரியான பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூர் கதவணையிலிருந்து காவிரி உபரி நீரினை குழாய் மூலம் கொண்டு செல்ல கடுமையான முயற்சி மேற்கொள்வேன். தொட்டியம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் பெண்கள் அரசு கலை மற்றும் தொழிற்பயிற்சி மையங்கள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்வேன்.

செட்டிக்குளம் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு பெற முழுமுயற்சி செய்வதோடு, ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்திடவும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வேன். மண்ணச்சநல்லூர் அரிசி, முசிறி கோரைப்பாய், தொட்டியம் வெற்றிலை  போன்ற விளைப்பொருட்களை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கொண்டு விற்பனை செய்ய தகுந்த நடவடிக்கை மேற்கொள்வேன். பெரம்பலூர் தொகுதி மக்களின் 75 ஆண்டு கால கனவுத்திட்டமான அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக துறையூர், தாத்தையங்கார்பேட்டை, நாமக்கல் வரை 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரயில்வே இருப்பு பாதை அமைக்க கடுமையாகப் போராடி  தமிழகத்திலேயே இருப்பு பாதை இல்லாத பகுதி என்ற பெயரினை நிச்சயம் மாற்றி காட்டுவேன்

பெரம்பலூர் தொகுதியில் சிறு, குறு தொழில் மையங்கள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு விரைவில் கிடைக்க ஆவண செய்வேன். புளியஞ்சோலை, பச்சைமலை, ரஞ்சன்குடி கோட்டை போன்ற சுற்றுலா தலங்கள் பகுதிகளுக்கு பொது மக்கள் சுலபமாக சென்று வரத் தகுந்த வழித்தடம் மற்றும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர பாடுபடுவேன். ஆன்மீகத்தின் அடையாளமாகத் திகழும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், திருப்பட்டூர் பிரம்மா கோவில், வெங்கனூர் விருதாச்சலேஸ்வரர் திருக்கோவில் போன்ற புனிதத் தலங்களுக்கு தினந்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்து தர முயற்சிகள் மேற்கொள்வேன். தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து மக்களுக்கு பெற்றுத் தர ஆவண செய்வேன்.

இலால்குடி இரயில்வே மார்க்கமாக செல்லும் சென்னை - மங்களூர் எக்ஸ்பிரஸ் மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகிய அதிவிரைவு இரயில்கள் பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படும் வசை இலால்குடி இரயில் நிலையத்தில் நின்று செல்ல தகுந்த நடவடிக்கை எடுப்பேன். குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும், மருதூர் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டவும், குளித்தலை - மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் இரயில்வே மேம்பாலம் அமைக்கவும் தகுந்த முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்வேன். மொத்தத்தில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் மக்களுக்கு கிடைத்திட பாராளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிப்பேன். எனவே, அனைவரும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.