Skip to main content

மத்தியிலும், மாநிலத்திலும் இரண்டு தளபதிகள் ஆளப்போகிறார்கள்; முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் நெகிழ்ச்சி

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

மயிலாடுதுறை திமுக வேட்பாளரை ஆதரித்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்துவரும் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், மக்களை கவரும் வகையில் இடங்களுக்கு ஏற்ப செய்திகளையும் மக்களிடம் கூறி நெகிழவைக்கிறார்.

 

ramalingam

 

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுகவும், அதிமுகவும், நேரடியாக மோதுகின்றன.  28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் மயிலாடுதுறையில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறை தொகுதி என்றாலே காங்கிரஸின் கோட்டை மணிசங்கர் ஐயரின் சொந்த தொகுதி என்று பேசப்பட்டு வரும் நிலையில், இந்தமுறை திமுகவின் சார்பில் முன்னாள் திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. ராமலிங்கத்திற்கு சீட்டு வழங்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
 

 அதிமுக, திமுகவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர், ராமலிங்கத்திற்கு வாக்கு கேட்டு வீதிவீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார். பாரம்பரியம் கொண்ட திருப்பனந்தாள் காசி மடம் பகுதில் மடத்தின் தன்மைகளைப் பற்றி பேசினார். பந்தநல்லூர் பகுதிக்கு வந்து பசுபதிகோயில் மற்றும் அதனை சுற்றியிருக்கும்  கோட்டை வரலாறுகளைப்பற்றி பேசினார். அதேபோல் கிராமப்புறங்களுக்கு செல்லும்பொழுது "நான் மயிலாடுதுறைக்கு வரும்போது திக்கும் தெரியாது திசையும் தெரியாது, என்னை கரம் பிடித்து அழைத்துச் சென்றவர்களில் ஒருவர் ராமலிங்கம். இன்றைக்கு எனக்கு எல்லா வீதிகளையும் தெரியும். ஆனால், ராமலிங்கம் எம்.பி ஆவது உறுதி, அவருக்கு டெல்லியில் விதிகள் தெரியாது. அவருக்காக நான் அங்கு காத்திருப்பேன். ஒவ்வொரு வீதிகளையும் கரம் பிடித்து அழைத்துச் சென்று காண்பிப்பேன். இது நான் மயிலாடுதுறை தொகுதி மக்களுக்கு செய்யும் நன்றிக்கடன். என்னால் இந்த தொகுதியை மறக்க முடியவில்லை. ஆனால் இந்த முறை எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் இதுவரை கை சின்னத்திற்கு வாக்களித்த நீங்கள் இந்த முறை சூரியனுக்கு வாக்களித்து மோடியை வீட்டுக்கு அனுப்புங்கள்" என வாக்கு சேகரித்தார். இது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.
 

அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தவர், "மயிலாடுதுறை தொகுதியில் உள்ள வாக்காளர்கள் ஆர்வத்துடன் உற்சாகத்துடன் இருக்கின்றார்கள். திமுக வேட்பாளர் ராமலிங்கத்திற்கு அமோக வரவேற்பு அளித்து வருகிறார்கள். அதனால் ராமலிங்கம் வெற்றி பெறுவது உறுதி. ஏழு முறை இந்த தொகுதியில் போட்டியிட்டவன் இந்த அனுபவத்தை வைத்து ராமலிங்கம் வெற்றி பெறுவார் என உறுதியுடன் கூறுகிறேன். மக்கள் சந்தோஷமாக இருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முறை 40 தொகுதிகளிலும் நமக்குதான் வெற்றி என்று உறுதியுடன் தெரிகிறது. தமிழகத்திலும் மத்தியிலும் இரண்டு தளபதிகள் ஆட்சி செய்யப் போகிறார்கள். ராகுல் காந்தி பிரதமராகவும், மு.க. ஸ்டாலின் முதல்வராகவும் ஆட்சி செய்யப் போகிறார்கள்" என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.