Skip to main content

எச்.ராஜாவிற்கு எதிராக ஒன்னு சேர்ந்த திமுக, அதிமுக! அதிருப்தியான எச்.ராஜா!

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ளது அரியநாச்சி கிராமம். இக்கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலை சின்னக்கல்பூண்டியான் வகையறாவைச் சேர்ந்தவர்கள் காலம்காலமாக நிர்வகித்து வருகின்றனர். கோவில் கட்டடங்கள் சிதிலமடைந்து உள்ளதால் புதிதாக கோயில் கட்டுவதற்கு முடிவெடுத்தனர். அதற்கு அதே ஊரைச் சேர்ந்த கீழக்கல்பூண்டியான் வகையறா வைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

 

bjp


இவ்விரு தரப்பினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தனித்தனி குழுவாகச் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அந்த ஊருக்கு வந்து கோயிலுக்கு அருகிலுள்ள இடத்தில் மாரியம்மன் சிலையை வைத்து கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கினார். அப் போது எதிர்த்தரப்பினர் ஆட்சேபித்ததால் உடனடியாக அங்குசென்ற காவல்துறையினர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் எனக் கூறி ஹெச்.ராஜாவை அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்தித்தனர். இந்நிலையில் இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹெச்.ராஜாவை வரவழைத்து அவர் மூலம் கோயி லுக்கு அருகிலுள்ள மந்தைவெளியில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்போவதாக கூறி அவரை வரவேற்கும் வகையில் சின்னக்கல் பூண்டியான் வகையறா சார்பில் 31-ஆம் தேதி வேப்பூர் பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதையடுத்து ஹெச்.ராஜாவின் வருகைக்கு எதிர்ப்புதெரிவித்து அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் மற்றொரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. கடந்த 01-ஆம் தேதி மாலை வேலூரிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்துவிட்டுப் போகலாமென வேப்பூர் வந்தார் ஹெச்.ராஜா. ஆனால் ஏற்கனவே கலவரமேகம் சூழ்ந்துள்ள நிலையில் ராஜா வருகையைத் தடுக்க 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது காவல்துறை.

மாலை சுமார் ஆறரை மணியளவில் வேப்பூர் வந்த ஹெச்.ராஜா தனியார் ஹோட்டலில் தங்கினார். ராஜா வந்திருப்பதை அறிந்த கீழக்கல் பூண்டியான் வகையறாவினர் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். அவர்களை சமாதானம் செய்த காவல்துறை அதிகாரிகள் ராஜா தங்கியிருந்த ஹோட்ட லுக்கு சென்று தடையுத்தரவையும், நிலைமையையும் எடுத்துச்சொல்ல, அரியநாச்சி செல்லும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார். ஆயிரம் பிரச்சனை, அறிக்கைப் போர் என இருந்தாலும் ஹெச்.ராஜாவை எதிர்ப்பதில் அ.தி.மு.க. -தி.மு.க. கழகங்கள் கைகளை இணைத்துக்கொண்டதை சமூக ஊடகங்கள் சுட்டிக்காட்டி வேடிக்கையான கமெண்ட்களைத் தெரிவித்திருந்தன.

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.