Skip to main content

'திமுக என்றுமே மக்கள் பக்கம்தான்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
 'The DMK is always on the side of the people whether it is in power or not' - Chief Minister M. K. Stalin's speech

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''எச்சரிக்கை செய்தவர்கள் கூட இவ்வளவு பெரிய மழை வரும் என எச்சரிக்கை செய்யவில்லை. மழை வரும், கனத்த மழை வரும், மழை காற்றுடன் மழை வரும், புயல் கற்றோடு மழை வரும் என்றுதான் எச்சரிக்கை சொன்னார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வெள்ளம் வரும், ஒரு நாள் முழுக்க விடாமல் மழை பெய்யும் என்றெல்லாம் கூட எச்சரிக்கை செய்யவில்லை.

இதுவரை 47 வருடத்தில் பார்க்காத ஒரு மழையை நாம் பார்த்தோம். எப்பொழுதுமே திமுகவை பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லை என்று சொன்னாலும் சரி மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி. நாம் பலமுறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். பல முறை ஆட்சியில் இல்லாமலும் இருந்திருக்கிறோம். ஆட்சியில் இருந்தபோதும் இப்படிப்பட்ட பேரிடர்களை சந்தித்து இருக்கிறோம். ஆட்சியில் இல்லாத பொழுதும் இது போன்ற பேரிடர்களை சந்தித்து இருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் நேரத்திலாவது நமக்கு இருக்கக்கூடிய அதிகாரம்; அந்த வசதிகள்; மீட்பு செயலில் ஈடுபடக்கூடிய கருவிகள் அவையெல்லாம் சுலபமாக கிடைத்துவிடும். அதை பயன்படுத்தி அந்த பணிகளை நிறைவேற்ற முடியும். ஆனால் ஆட்சியில் இல்லாத நேரத்தில் நாம் சந்தித்த பேரிடர் எப்படி எல்லாம் அந்த களத்தில் இறங்கினோம் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

வேற ஒன்றும் வேண்டாம் கொரோனா என்ற ஒரு கொடிய நோய் வந்தது. அந்த கொடிய நோய் வந்த பொழுது நாம் எப்படி எல்லாம் சீரழிந்தோம்; எவ்வளவு பேரை இழந்தோம்; எப்படிப்பட்ட கொடுமைகளுக்கு எல்லாம் ஆட்பட்டோம்; பொருளாதாரம் எந்த அளவிற்கு சீர்குலைந்து போச்சு; வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாது;  வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை; தொழிலுக்கு போக முடியவில்லை; வேலைக்கு போக முடிவில்லை; பள்ளிக்கூடத்திற்கு போக முடியவில்லை; கடைக்கு போய் உணவு கூட வாங்குவதற்கான அந்த வசதி கூட இல்லாத ஒரு கொடுமையான சூழ்நிலை இருந்தது.

அந்த நேரத்தில் அரசாங்கம் என்ன செய்யவில்லை என்ன செஞ்சிருக்கணும் பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை. அது தேவையில்லை இப்பொழுது. ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது 'ஒன்றிணைவோம் வா' என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு அந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்ண உணவு; இருக்க இடம்; உடுத்த உடை; மருத்துவ வசதியை தேடி தேடி போய் அவர்களை தொடர்பு கொண்டு நாமாக வசதிகளை செய்து கொடுத்த கட்சிதான் திமுக என்று கம்பீரமாக சொல்லிக் கொள்ள முடியும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.