Advertisment

திமுக மார்க்சிஸ்ட் இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்து!

kl;

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் மற்றொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியுடன் இன்று (08.03.2021) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு திமுக 54 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்த முறை திமுகவின் உதயசூரியன் சின்னம் 180க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக மோத உள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe