தேமுதிக அதல பாதாளம் செல்லகூடிய அறிகுறிகளெல்லாம் அருமையாக தென்படுகிறது எனவும், இதற்கு காரணம் ரேமலதாவும், சுதீஷும் எனவும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Krishnapriya.jpg)
சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் இவரும் பெங்களூரு சிறையில் உள்ளார். இளவரசின் மகள் கிருஷ்ணப்ரியா. இவர் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் செயல்பாடுகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ''2006 முதல் தே.மு.தி.க , திரு விஜயகாந்த் அவர்களால், அடைந்த உயரத்தின் அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, அதல பாதாளம் செல்லகூடிய அறிகுறிகளெல்லாம் அருமையாக தென்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைக்கு அக்கட்சியை தள்ளியதில் சம பங்கு வகிக்கிறார்கள் திருமதி பிரேமலதாவும் , திரு சுதீஷும்''. என குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)