Skip to main content

அதிமுக கூட்டணியே வேண்டாம் என தேமுதிக முடிவு? எடப்பாடிக்கு பாஜக கொடுத்த அழுத்தம்... அப்செட்டில் அதிமுகவினர்!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி.களுக்கான இடங்களுக்கு தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோருக்கு வாய்ப்பளித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில், அ.தி.மு.க.வில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற பரபரப்பு கடந்த வாரம் முழுவதும் எதிரொலித்தபடி இருந்தது. ராஜ்யசபா சீட்டை கைப்பற்ற அ.தி.மு.க.வின் சீனியர்களான கே.பி.முனுசாமி, தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், விஜிலா சத்யானந்த் உள்ளிட்ட சீனியர்களும், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என புதிய முகங்களும் மல்லுக்கட்டினர். அதேசமயம், ஒரு இடத்தை கேட்டு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவும், த.மா.கா. தலைவர் வாசனும் அ.தி.மு.க. தலைமைக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

 

dmdk



இதில், கூட்டணி தர்மத்தை முன்னிறுத்தி வெளிப்படை யாகவே கேட்டார் பிரேமலதா. ஆனால், வாசனோ ரகசியமாக காய்களை நகர்த்தியபடி இருந்தார். 3 சீட்டுகளுக்கு 30 அ.தி.மு.க. வினரும் கூட்டணி கட்சிகளும் மல்லுக்கட்டுவதால் முடிவெடுக்க முடியாமல் திணறி வந்த எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், திங்கள்கிழமை காலையில் அ.தி.மு.க. சார்பில் இருவரைத் தேர்வு செய்ததுடன், மூன்றாவது சீட்டை ஜி.கே.வாசனுக்கும் ஒதுக்கி அறிவித்தனர். கூட்டணிக் கட்சிக்கு வாய்ப்பளித்திருப்பதை ஜீரணிக்க முடியாத அ.தி.மு.க. மா.செ.க்கள் பலரும் எடப்பாடியிடம் கேள்வி எழுப்ப, ‘டெல்லியின் அழுத்தங்களுக்கு பணிய வேண்டியதிருக்கிறது. அதனை புரிந்துகொள்ளுங்கள்'' என சமாளித்திருக்கிறார்.

ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா ஒதுக்கப்பட்டது குறித்து விசாரித்தபோது, "ஜி.கே.வாசனுக்கு குரு ஸ்தானத்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மோடிக்கும் வாசனுக்கும் நண்பராக இருக்கும் தொழிலதிபர் அதானியும் ஜி.கே. வாசனுக்கு எம்.பி.சீட் வாங்கித் தருமாறு மோடியிடம் சிபாரிசு செய்தனர். சமீபத்தில் டெல்லிக்கு சென்றிருந்த தமிழக அமைச்சர்கள் தங்கமணியும், ஜெயக்குமாரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். அப்போது, வாசனுக்கு சீட் குறித்து வலியுறுத்தியுள்ளார் அமித்ஷா. எடப்பாடியிடமும் தனிப்பட்ட முறையில் நல்லதொரு நட்பை உருவாக்கி வைத்திருக்கிறார் வாசன்'' என்கிறார்கள் அ.தி.மு.க.- த.மா.கா.வினர்.

 

bjp



த.மா.கா.வுக்கு சீட் ஒதுக்கப்பட்டதில் அப்-செட்டாகியிருக்கிறார் பிரேமலதா. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறலாமா என்று விவாதித்தும் வருகிறார்.


இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய மோடி திட்டமிட்டிருப்பதால், வாசனை எம்.பி.யாக்க சிபாரிசு செய்திருக்கும் முகர்ஜியும் அதானியும் வாசனை அமைச்சராக்கவும் முயற்சி எடுத்து வருகின்றனர். அதேசமயம், பா.ஜ.க.வில் த.மா.கா.வை இணைக்கவும் வாசனிடம் டெல்லி வலியுறுத்தியிருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.