Skip to main content

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Published on 14/03/2021 | Edited on 14/03/2021

 

dmdk party candidate list has been released

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ள நிலையில், வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு  60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, தே,மு.தி.க. சார்பில் போட்டியிடும் 60 பேர் கொண்ட முழு வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். 

dmdk party candidate list has been released

 

அதன்படி,  கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் டில்லி, திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி, ஆவடி சட்டமன்றத் தொகுதியில் சங்கர், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் சுபமங்களம் டில்லிபாபு, திரு.வி.க.நகர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் சேகர், எழும்பூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் பிரபு, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் பார்த்தசாரதி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் முருகன், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் முருகேசன், செய்யூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் சிவா, மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் மூர்த்தி, கே.வி.குப்பம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் தனசீலன், ஊத்தங்கரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் பாக்யராஜ், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் முருகேசன், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் விஜயசங்கர், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் உதயகுமார்,  செங்கம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அன்பு, கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் நேரு, ஆரணி சட்டமன்றத் தொகுதியில் பாஸ்கரன், மைலம் சட்டமன்றத் தொகுதியில் சுந்தரேசன்,  திண்டிவனம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் சந்திரலேகா, வானூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் கணபதி, திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் வெங்கடேசன், கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்றத்  தொகுதியில் விஜயகுமார், ஏற்காடு (ப.கு) சட்டமன்றத் தொகுதியில் குமார், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் ரமேஷ் அரவிந்த், சேலம் (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் அழகாபுரம் மோகன்ராஜ், நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் செல்வி, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் சிவசுப்பிரமணியன், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் குழந்தைவேலு, பவானிசாகர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் ரமேஷ், கூடலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் யோகேஸ்வரன், அவிநாசி (தனி) சட்டமன்றத் தொகுதியில் மீரா, திருப்பூர் (வடக்கு) சட்டமன்றத் தொகுதியில் செல்வகுமார், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியில் முருகராஜ், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மாதவன், நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் ராமசாமி, கரூர் சட்டமன்றத் தொகுதியில் ரவி, கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் கதிர்வேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

dmdk party candidate list has been released

 

அதேபோல், மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் கிருஷ்ணகோபால், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் செந்தில்குமார், முசிறி சட்டமன்றத் தொகுதியில் குமார், பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் ராஜேந்திரன், திட்டக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் உமாநாத், விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் சிவகொழுந்து, கடலூர் சட்டமன்றத் தொகுதியில் ஞானபண்டிதன், கீழ்வேளூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் பிரபாகரன், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் முத்துசிவக்குமார், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் சுப்பிரமணியன், சோழவந்தான் (தனி) சட்டமன்றத் தொகுதியில் ஜெயலெட்சுமி, மதுரை (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் பாலச்சந்தர், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் ரமேஷ், பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் சந்திர பிரகாஷ், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் சந்திரன், ஒட்டப்பிடாரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் ஆறுமுக நயினார், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் ராஜேந்திராநாதன், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயபால், குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் சிவக்குமார், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் ஐடன் சோனி ஆகியோர் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகின்றனர். 

dmdk party candidate list has been released

 

தே.மு.தி.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.