Skip to main content

பல மணி நேரம் காத்திருந்து வருத்தத்துடன் திரும்பிய விஜயகாந்த் ரசிகர்கள்..!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

DMDK leader Vijayakanth Didn't cast his vote


தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இரவு 7 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. 

 

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், திமுக முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலின், ம.நீ.ம. முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன், நா.த.க. முதல்வர் வேட்பாளர் சீமான், அமமுக முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன், திரை நட்சத்திரங்கள் ரஜினி, அஜித், விஜய் என அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.  

 

DMDK leader Vijayakanth Didn't cast his vote

 

இதில் அமமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருகம்பாக்கம், காவேரி பள்ளியில் தனது வாக்கினை காலை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து பிற்பகல் பொழுதில் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த தேமுதிகவினர் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் எப்போது வருவார் என காத்திருந்தனர். மாலை 6 மணிக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

DMDK leader Vijayakanth Didn't cast his vote

 

ஆனால் இறுதிவரை அவர் வாக்களிக்க வரவில்லை. மேலும், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் வரவில்லை எனும் பேச்சும் அப்பகுதியில் ஏற்பட்டது. இதில் மூட் அப்சட்டான அக்கட்சி தொண்டர்கள், ‘தேர்தல் பிரச்சாரத்திற்காக வேன்களில் சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய தலைவர், வாக்களிக்க வந்திருந்தால் இன்னும் உற்சாகமாக இருந்திருக்கும்’ என வருத்தப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

Next Story

விஜயகாந்த் மறைந்து 100ஆவது நாள் - கண்ணீருடன் பிரேமலதா அஞ்சலி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024

 

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 100 நாள்கள் நிறைவைடைகிறது. இதையொட்டி பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன் உடனிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்