Skip to main content

தேமுதிக விவகாரம்: ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு நெருக்கடி கொடுக்கும் அதிமுக நிர்வாகிகள்

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

 

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் அழுத்தம் காரணமாக தேமுதிகவுக்காக கூட்டணியை இறுதி செய்யாமல் வைத்துள்ளது அதிமுக தலைமை.
 

''தேமுதிக நிச்சயம் நம்ம கூட்டணிக்குத்தான் வரும் ஆகையால் அவர்கள் கேட்கும் தொகுதிகளை பரிசீலியுங்கள்'' என்று அதிமுக தலைவர்களிடம் கூறி வந்தது பாஜக. இதனால் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முதல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

 

ops-eps


 

அதிமுக ஒதுக்கும் 4 தொகுதிகளை ஏற்க மறுத்த தேமுதிக, பாமகவைவிட அதிக தொகுதிகளை ஒதுக்கித் தருமாறு தொடர்ந்து தனது கருத்தை கூறி வந்தது. இதனால் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் திடீரென திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது பாஜக தலைவர்களுக்கும், அதிமுக தலைவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 

இந்த நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளனர். ''பாஜகவின் அடிமை அதிமுக என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது. நாங்கள் அப்படியில்லை பாஜகவுக்கு 5 தொகுதிகளைத்தான் ஒதுக்கியுள்ளோம் என்று உங்கள் திறமையை காட்டினீர்கள். அதனை நாங்கள் வரவேற்கிறோம். கூட்டணி கட்சிகளுக்கு போக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்று திமுக தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் நாம் கூட்டணி கட்சிகளுக்குபோக திமுக போட்டியிடும் 20 தொகுதிகளை விட அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டும். வட மாட்டங்களில் கண்டிப்பாக அதிமுக போட்டியிட வேண்டும். துணை முதல்வராக இருக்கும் நீங்களே நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தேமுதிக நிர்வாகிகள் திமுகவிடம் பேசியிருக்கிறார்கள். அவர்களும் தங்களது முடிவை தெளிவாக கூறியுள்ளனர்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 5 தொகுதியில் போட்டியிடுகிறது என்று பியூஸ்கோயல் கூறுகிறார். ஆனால் எங்கள் கூட்டணி பாஜகவுடன்தான் என்று நம்மை மதிக்காமல் பேசுகிறது தேமுதிக. ஜெயலலிதா இருந்தபோதே ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன்தான் பங்கேற்றார். அவரும் இப்போது அதிமுகவில் உள்ளார். இப்போதே அவர்கள் அதிமுக மேடையில் பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்கிறார்கள். நாம் அவர்களுக்காக வேலை செய்வோம், அவர்கள் நமக்காக வேலை செய்யமாட்டாங்கன்னுதானே அர்த்தம். அப்படி பேசும் தேமுதிகவிடம் நாம் இறங்கி போக வேண்டுமா?


எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் இதுகுறித்து நம்மை விமர்சிப்பதை விட்டுவிடுங்கள். நம்ம கட்சிக்காரர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நினைத்து பாருங்கள். நம்ம எம்.பி. அன்வர்ராஜா, அதிமுகவில் ஆளுமைத்திறன் கொண்ட ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தற்போது அதிமுகவில் ஆளுமைத்திறன் கொண்டவர்கள் யாரும் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இனி ஒவ்வொருவராக பேச ஆரம்வித்துவிடுவார்கள். இனி முடிவு எடுக்க வேண்டியது நீங்கள்தான் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்களாம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.