Skip to main content

அவர்களுக்கு வேண்டியது பணம், பணம், பணம்... அவர்களுக்கு சீட்டு முக்கியமில்லை, நோட்டுதான் முக்கியம்: சந்திரகுமார்

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர், 2011ல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதால் விஜயகாந்த் கட்சிக்கு சரிவு ஏற்பட்டது. அதற்கு காரணம் அவருடைய குடும்பத்தினரின் தவறான வழிகாட்டுதல்தான். 2009ல் சுதீஷ், பிரேமலதா இருவரும் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட ஆரம்பித்துவிட்டனர். அதற்கு முன் தலையீடு வீட்டிற்குள் இருந்திருக்கலாம். அது வெளியில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
 

2006லேயே அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்று பிரேமலதா முயற்சித்திருக்கிறார். இது எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் வருங்கால முதல் அமைச்சர் விஜயகாந்த், தேமுதிக 234 தொகுதியிலும் தனித்து நிற்கிறது என்று கோஷம் போட்டுக்கொண்டிருந்தோம். 2014ல் எங்களை அழைத்துக்கொண்டு மன்மோகனை சந்திக்க சென்றார். பின்னர் 15 நாளில் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறார். அந்த நேரத்தில் 22 நிர்வாகிகள் சேர்ந்து திமுகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்றோம். இரண்டு பேர்தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றனர்.

 

chandrakumar


கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு என்று எங்களை போடுவார்கள். ஆனால் சுதீஷ், பிரேமலதா ஆகியோர் வீட்டில் முடிவு செய்துவிட்டு எங்களிடம் இதுதான் என்ற சொல்லுவார்கள். கட்சியில் இருந்தபோது எங்களைப்போன்ற நிர்வாகிகளிடம் எதுவும் கேட்டு முடிவு செய்ய மாட்டார்கள். நாங்களே வலிய சென்று கேப்டனிடம் பேசுவோம். நாங்கள் பேசும்போது எங்களிடம் அனைத்தையும் கேட்டுக்கொள்வார். வீட்டுக்கு போனவுடன் டோட்டலாக மாறிவிடுவார். அவர் குடும்பத்தின் மீது மிகந்த பாசம் வைத்துள்ளார். குடும்பத்தினர் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் கேட்பார். இது எல்லோருக்கும் தெரியும்.
 

என்னைவிடுங்கள், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட 9 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு சென்றனர். அவர்கள் கேப்டனை குறை சொன்னார்களா? சுதீஷ், பிரேமலதாவைத்தான் கை நீட்டினார்கள். தேமுதிகவில் ஜனநாயகம் கிடையாது. தேமுதிக கட்சி என்று சொல்லுகிறார்கள். அது கட்சி கிடையாது. கம்பெனியாக நடந்து வருகிறது. எனக்கு தெரிந்து அவர்கள் முழுக்க முழுக்க சுயநலவாதிகள். அவர்களுடைய சுயநலத்திற்காக, ஆதாயத்திற்கு எதுவும் செய்வார்கள். அவர்களுக்கு வேண்டியது எல்லாம் பணம், பணம், பணம். மணி மைன்ட். 
 

இதனை நான் உணர்ந்தது 2011ல். 2011ல், 2014ல், 2016ல் என்ன பேசினார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது. 2019ல் தேர்தல் கூட்டணிக்காக இருபக்கம் பேசி ஆதாரத்தை உண்டாக்கினார்கள். இந்த தேர்தலிலேயே இப்படி செய்தவர்கள், கடந்த தேர்தலில் ஏன் செய்திருக்க மாட்டார்கள் என்று எண்ணிப்பார்க்கவும். 
 

கேள்வி : முன்னதாகவே வாங்கிட்டார்கள் என்கிறீர்களா?
 

பதில் : ஒவ்வொரு தேர்தல்களிலும் அதைத்தான் வேலையாக பார்க்கிறார்கள். 
 

கேள்வி : அவர்களுக்கு சீட்டு முக்கியமில்லையா?
 

பதில் : அவர்களுக்கு சீட்டு முக்கியமில்லை, நோட்டுத்தான் முக்கியம். தொகுதியை பேசிக்கொண்டிருப்பதாக சொல்லுவார்கள். அவர்கள் தொகையைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். எங்களுக்கு உள்ள வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது என்று பேசுவார்கள். முன்பு இருந்த வாக்கு வங்கி தற்போதும் இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.