Skip to main content

'16 வயதினிலே' சப்பானி போல ரஜினியும், கமலும் பாஜக-வுக்கு... - இயக்குனர் கௌதமன் தாக்கு!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

குடியுரிமை பாதுகாப்பு திருத்தச் சட்டத்தை திருப்ப பெறக் கோரி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 14 வது நாளாக நடந்த தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த இயக்குநர் கௌதமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 

 

Director Gowthaman about Rajini and kamal

 



அப்போது, "டெல்லியில் நடந்த போராட்டத்தில் 39 இஸ்லாமியர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டது. இதில் ஒரு போலீஸ்காரர் உடல் பிரேதப் பரிசோதனை செய்தபோது அவரது உடலிலிருந்து காவல்துறையின் குண்டு தான் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளனர். அப்படியானால் வன்முறையை தூண்டயது யார் என்பது வெளி உலகிற்குத் தெரியும். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று சொன்ன நீதிபதியை ஏன் பஞ்சாப் மாநிலத்திற்கு  மாற்றினார்கள்.

பாஜக கூட்டணியில் இருக்கும் நிதீஷ் குமார் கூட இந்த சட்டத்தை ஏற்க முடியாது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். பாண்டிச்சேரியில் இந்த சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று  அந்த மாநில முதல்வர் பகிரங்கமாக அறிவித்து விட்டார். ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய வல்லமை படைத்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏன் இந்த தீர்மானத்தை கொண்டுவர தயங்குகிறார்கள். நாங்கள் ஓட்டுப்போட்டு கோட்டைக்குப் போன எங்கள் தமிழக அரசு ஏன் தீர்மானம் நிறைவேற்ற வில்லை.

 



வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய பெண்களை அடித்து துரத்தினார்கள். அதன்பிறகு வலுப்பெற்ற போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது. முத்துப்பேட்டையில் 14வது நாளாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.  தமிழ்நாடு அரசும்,  இந்திய அரசும் இந்த கருப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். ஆனால் செவிசாய்க்கவில்லை. உயிர்ப்பலிகள் வாங்கியது போதும் கருப்பு சட்டத்தை திரும்பப் பெறுங்கள் அல்லது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வென்றது போல இஸ்லாமியர்களும் வெற்றி பெறுவார்கள்.

ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு என்றாலும் முன்னால் நின்று போராடுவேன் என்று சொன்னார். ஆனால் டெல்லியில் 39 உயிர்கள் போன நிலையில் பசப்பு நாடகமாடி இருக்கிறார். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். பின்னாலிருந்து இயக்குகிறது என்பதற்கு அவரது பேச்சு சான்றாக உள்ளது. அதேபோல ரஜினிக்கு வக்காலத்து வாங்கும் கமலின் பேச்சும் அப்படியே இருக்கிறது. அதாவது 16 வயதினிலே படத்தில் முதுகு பிடித்துவிடும் சப்பானியை போலத்தான் ரஜினியும் கமலும் பாஜக-வுக்கு முதுகு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் ஒப்புக்கு நடிக்கக் கூடாது. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை அழித்துவிட்டு ஆட்சியும் நடத்த முடியாது. 

50 ஆயிரம் ஆண்டுகள் மரபோடு நாங்கள் தமிழர்கள் ஒன்றாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் உயிர்கள் பறிக்கப்படுமானால் எங்கள் உயிரை தந்தாவது அவர்களை உயிர்களை காப்போம். டெல்லியில் 39 உயிர்கள் மட்டுமல்ல கூடுதலாகவும் போயிருக்கலாம் மறைக்கிறார்கள். டெல்லி தேர்தல் பாஜகவுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதை மோடி உணர வேண்டும். காவிரி பாதுகாப்பு வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் இதற்கு முன்பு ஏலம் எடுத்து விட்டோம் என்று இங்கே யார்  வர நினைத்தால் அவர்களை இங்கிருந்து போக கூட விட மாட்டோம்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.