Advertisment

திண்டுக்கல்லில் ரூம்போட்டுதான்... ஜெயக்குமார் தொடர்பாக வெற்றிவேல் பேட்டி

InterviewVetriivel

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Advertisment

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரிடம் பேசிவிட்டுதான் இந்த ஆடியோ வெளியிடப்பட்டதா?

Advertisment

நான் இந்த ஆடியோவை வெளியிடவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இதுபோன்ற விசயங்கள் நிறைய நடக்கிறதா?

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருக்கும்போது, நாங்கள் இங்கு அழுதுக்கொண்டிருக்கும்போது, திண்டுக்கல்லில் ரூம்போட்டு இதனை செய்திருக்கிறார்.

எந்த தேதியில்?

பிறகு சொல்கிறேன்.

எந்த மாதம்?

என்னிடம் ரசீது உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் இது நடந்திருக்கிறது.

மீடூ விவகாரம் தலைதூக்கும் நேரத்தில் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று குரல் எழுமா?

யார் யாரையோ ஏன் துணைக்கு இழுக்க வேண்டும். பதவி விலக வேண்டும் என்று நானே கோரிக்கை வைக்கிறேன்.

ஜெயக்குமாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவீர்களா?

தேவைப்பட்டால், அந்த குழந்தைக்கும், பெண்ணுக்கும், அந்த குடும்பத்திற்கோ ஏதேனும் ஏற்பட்டால் போராட்டம் நடத்துவோம்.

சசிகலா, தினகரன் இதற்கு பின்னால் இருப்பதாக ஜெயக்குமார் சொல்ல காரணம் என்ன?

என்னை குறிவைத்து விட்டு அவர்களை சொல்கிறார். பதட்டம். 82ல் ஜெயலலிதா இவரை அறிமுகப்படுத்தியதாக சொல்கிறார். அதில் உண்மை இருக்கிறதா. 82ல்தான் ஜெயலலிதாவே அரசியலில் எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்டார். 91ல் தான் இவர் தேர்தலில் வந்தாக எனக்கு ஞாபகம். பதட்டத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். தொகுதியில் உள்ள பெண்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இன்னும் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா?

இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீங்கள் நீதிமன்றத்தில் புகார் கொடுக்கலாமே?

அவர்கள் சார்பில் நான் புகார் கொடுத்தால் எடுத்துக்கொள்வார்களா என்று சொல்ல முடியாது. யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் புகார் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு பதில் அளித்தார்.

interview jayakumar Vetrivel
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe